districts

img

வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் தளி ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, நவ.4-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ஒன்றிய 12வது மாநாடு ராஜம்மா, அனுமப்பா, அம்ப்ரிஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  மூத்த உறுப்பினர் நாகராஜ் மாநாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். ராமமூர்த்தி வர வேற்றார். பட்டாபிராமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தளி ஒன்றிய குழு பொறுப்பாளருமான  சி.பிரகாஷ் வேலை மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் நிறைவுரையாற்றினார். அனுமப்பா நன்றி கூறினார். தீர்மானங்கள் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கூறி தளி ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களை வாழ விடாமல் வெளியேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும். வனங்களில் ஆடு, மாடுகள் மேய்க்க, சிறு மகசூல் எடுக்க 2006 வன உரிமை சட்டத்தின்படி அனுமதிக்க வேண்டும்.பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்க ளின் வீடுகள், விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மயானங்கள் இல்லாத தலித் கிராமங்களுக்கு மயானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மயானப் பாதைகளை விடுவிக்கவேண்டும். மலர் சாகுபடி விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு தேர்வு 9 பேர் கொண்ட தளி ஒன்றிய குழுவிற்கு செயலாளராக ஆர். நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.