districts

img

வீடு தேடி வரும் நீரிழிவு சிகிச்சை திட்டம் சென்னையில் துவக்கம்

சென்னை, நவ. 11- நீரிழிவு நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கவும், மூத்த குடி மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஹெல்த்தி ஏஜிங் கிளினிக் மற்றும் டாக்டர். மோகன்’ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையம் துவங்கியுள்ளது.  நாட்டில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், அதற்கான சிகிச்சை முறை, தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கவனம் செலுத்த உள்ளதாக மையத்தின் நிறு வனர் டாக்டர் மோகன் கூறினார். ஆண்டுதோறும் ‘உலக நீரிழிவு தினம்’ நவம்பர் 14-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. அதையொட்டி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று சிறப்பான மருத்துவ சேவையை இந்த மையம் வழங்க உள்ளது. இதன்மூலம் வயதான நோயாளிகள் எங்கும் அலையாமல் தங்கள் வீடுகளிலேயே நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பெறலாம் என்று அவர் தெரிவித்தார். ஹெல்த்தி ஏஜிங் கிளினிக், இந்தியா வில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்  பட்டுள்ளது. இது வயதானவர்கள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக துவக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் நீரிழிவு நோயால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும்  தனித்துவமிக்க கவனிப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த கிளினிக்கில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு உள்ளது என்று டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா  கூறினார். மையத்தின் ஆலோசகர் டாக்டர். எஸ். உத்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.