தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் திருவள்ளூரில் புறப்பட்ட நடைபயண பிச்சாரக்குழு செவ்வாயன்று (மே 23) ராணிப்பேட்டைக்கு சென்றது. அங்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிபிஎம் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன், மணிகண்டன், முரளி, வேலு, மனோகர், ஜீவா, ம. கோவலன், அமிர்தவள்ளி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.