சென்னை, பிப். 23- காதல் திருமணம் செய்த 24 இணையர்களுக்கு எழுத்தாளர் ச.தமிழ் செல்வன் பரிசு வழங்கி கவுர வித்க்கதார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் ஆர்.கே. நகர் பகுதி வ.உ.சி.நகரில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கிளைச் செயலாளர் பாஷா தலைமையில் வியாழனன்று (பிப். 22) நடைபெற்றது. இதில் 1984ஆம் ஆண்டு முதல் சாதி மறுத்து, மதம் மறுத்து காதலித்து சுயமரி யாதை திருமணம் செய்து கொண்ட மேரி - சுரேந்திர பாபு, விஜயகுமார் - கீர்த்திகா இணையர்கள் உட்பட 24 இணையர்களுக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் கேடயம் வழங்கி கவுரவித்தார். இதில் 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எல்.பி.சரவணத் தமிழன், பொருளாளர் அ.விஜய், பகுதி தலைவர் ராஜா, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கு.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிறைவாகதுணைத் தலைவர் வெண்மணி நன்றி கூறினார்.