கிருஷ்ணகிரி, ஆக.18- ஓசூர் பிரதான கடைவீதி யில் தாலுகா அலுவலகம் முதல் பேருந்து நிலையம் அருகில் பாகலூர் சாலை வரை மேட்டில் இருந்து பள்ளத்திற்கு பாயும் நீண்ட கழிவுநீர் கால்வாய் உள்ளது. நகரின் முக்கிய பகுதி கள் அனைத்து கழிவு நீரும் அதன் வழியே தான் வெளியேற வேண்டிய கட்டாயம் உள்ளது. இக்கால்வாய் அகலப் படுத்த படாமலும்,பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் கழிவு நீர் சாலையின் மீது ஓடி பேருந்து நிலையம் அரு கில் பழைய நகராட்சி அலு வலகம் பகுதிகளில் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றத்துடன் சுகா தார சீர்கேடு ஏற்படுத்தி வரு கிறது. ஓசூர் பேருந்து நிலை யம் அடுத்துள்ள பழைய நக ராட்சி அலுவலக முகப்பானை இங்கு உள்ள பூக்கடை முதல் காய்கறி பழக்கடைகள் அனைத்தும் கழிவு நீர் சூழ்ந்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிறிது மழை பெய்தால் கூட இங்குள்ள சிறு சிறு கடைக்காரர்கள் கடை நடத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தள்ளு வண்டி, சிறு கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படு வதை தடுத்திட உடனடி யாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்,அகலப்படுத்த வேண்டும்,தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப் படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.