districts

img

பறவைகளின் தாகத்தையும் பசியையும் போக்கும் குடும்பம்

திருவள்ளூர், மே 3- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த 4 ஆண்டு களாக பறவைகள் மற்றும் விலங்கு களின் தண்ணீர் தாகத்தை ஒரு குடும்பம் போக்கி வருகிறது.  பழவேற்காடு கிராமத்தை சேர்ந்த ப.ராமு  ஒரு தனியார் நிறுவன ஊழியர்.  அவரது ஓடு போட்ட பழைய வீடு வர்தா மற்றும் கஜா புயல் போன்ற பல புயல்களின் காரணமாக சேத மடைந்ததால் 2019-ல் வீட்டின் ஒரு பகுதியை புதுபித்து மாடி வீடு கட்டி னார். அந்த கட்டிடம் கட்டப்பட்ட நாளி லிருந்து வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அவரது குடும்பத்தினர் தண்ணீர் மற்றும் உணவு வைத்து பசியை போக்கி வருகின்றனர். காலையில் அலுவலகம் செல்லும் முன்பு ராமு தண்ணீரும், உண வும் வைத்து விட்டுச் செல்வார். மதியம் பள்ளியில் இருந்து வந்ததும்  12வது வகுப்பு படிக்கும் அவருடைய மகள் ராகவி  பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் முதலில் உண வும், தண்ணீரும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு  இல்லையென்றால் உணவையும் தண்ணீரையும் வைத்து விட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பார்.  முதலில் பானையில் தான்  உணவும் தண்ணீரும் வைத்துள்ளனர்.அதனை விலங்குகள் உடைத்து விடு வதால், சில்வர் பாத்திரத்தில் வைத்த னர். அதையும் விலங்குகளும், பறவைகளும் கீழே தள்ளி விடுவதால் இப்பொழுது பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கின்றனர்.   கோடைகாலம் துவக்கியுள்ள தால் ஒரு இடத்தில் வைத்துக்கொண்டி ருந்த உணவு மற்றும் தண்ணீர் இப்பொழுது மூன்று இடத்தில் வைத்துபறவைகளின் தாகத்தை போக்கி வருகின்றனர். இது குறித்து ராமு கூறுகையில், இந்த உலகத்தில் பல கோடிக்கும் மேல் உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் மனிதன் நிலத்தையும், நீரை யும் தனக்கானதாக ஆக்கிக் கொண்டான். அதை வியாபாரப் பொருளாகவும் மாற்றிவிட்டான். பறவைகளும் விலங்குகளும் நீருக்காக உணவுக்காகவும் தேடி அலைகின்றன. மனிதன் தன் தேவைக்காக மரங்களையும் வெட்டி விட்டதால் கோடையில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது . பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் அவதிப்படுகின்றது. எனவே அவற்றிக்கு தண்ணீர் மற்றும் உணவுத்  தேவையை நிறைவேற்றி வருகிறோம்  என்றார். தன்னுடைய அடுத்த இலக்கு பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அழகிய வீடு போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அதற்கு சமூக ஆர்வலர்கள் உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். பழவேற்காடு பறவைகள் சரணா லயம் அமைந்துள்ள இடம் என்பதால் இங்கு  வசிப்பவர்களும்  தம்மை  போன்று பறவைகளுக்கு உதவி செய்வார்கள்  என்று தாம் நம்புவதாக வும் அவர் கூறினார்.