districts

பயனற்று கிடக்கும் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்

நெமிலி, ஜூன் 8-

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் சந்தை மேட்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது.

    இங்கு பல ஆண்டுகளாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளி தரைக்கிணறு உள்ளது. தடுப்புச்சுவர் உயரம் குறை வாக இருப்பதோடு எப்போதும் திறந்து கிடப்ப தால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைகின்றனர்.

   எனவே பயனற்று கிடக்கும் கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பெற்றோர்களும், அந்த பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.