districts

img

வேரோடு பிடுங்கப்பட்ட 70 வயது ஆலமரம்

பூந்தமல்லி, ஜூலை 24-  போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளி யேற மதகு மற்றும் கால்வாய் அமைக்கும் பணி யில் மாங்காடு அடுத்த பரணி புத்தூரில் மழைநீர் கால்வாய் செல்லும் பாதை யில் இருந்த 70 ஆண்டு பழமை வாய்ந்த ஆல மரத்தை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது. ஆலமரத்தை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.யுடன் வந்த போது அப்பகுதி மக்கள் ஏராள மானோர் மரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரி கள் அங்கு வந்தனர். ஆல மரம் வேரோடு அகற்றப்ப பட்டு வேறு இடத்தில் நட்டு பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.  இந்த பணி யில் ஈடுபட்ட அதிகாரி ஒரு வர் கூறுகையில், ஆல மரத்தின் வேர் முழுவதும் 4 எந்திரங்களை பயன்படுத்தி முற்றிலும் அகற்றப்பட்டது.  சுமார் 60 அடி உயரம் உள்ள இந்த மரத்தின் பெரிய கிளைகள் வெட்டப்பட்ட பின்னர் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்று புதிய இடத்தில் நட்டோம். அதன் வேர்களை மாட்டுச் சாணம், மண்புழு உரம் மற்றும் வேரின் வளர்ச்சியை தூண்டும் உரங்களால் மூடி இடமாற்றம் செய்தோம். புதிய இடத்தில் ஆல மரத்தை வைப்பதற்கு முன்பு அது ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும் உரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டது. இந்த மரத்தின் வளர்ச்சியை சில மாதங்கள் கண் காணிப்போம் என்றார்.