districts

img

மதிய உணவில் அரணை 92 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம், பிப்.12- சிதம்பரம் அருகே சாக்கான்குடி கிரா மத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் பள்ளியில் திங்க ளன்று (பிப்.12)  மதிய உணவு பரிமாறப்பட்ட போது அதில் அரணை கிடந்துள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதிய உணவு வாங்கி சாப்பிட்ட மாண வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மாணவகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.  தொடர்ந்து மாணவர்கள் அதிகமா னோர் மயங்கியதால் சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவ மனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் 92 மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதில் யாருக்கும் ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேதம் அடைந்த உணவு கூடத்தை சரி செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி உணவு கூடங்களை திடீரென ஆய்வு செய்து குறை களை களைய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலை மையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.