கடலூரில் தொகுதியில் 9 பேர் மனு தாக்கல்
கடலூர், மார்ச் 26- கடலூர் மக்களவைத் தொகுதியில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் , தேமுதிக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் உள்பட 9 பேர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவ லரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். திங்களன்று தேமுதிக, பாமக, நாதக, பகுஜன் சமாஜ் மற்றும் ஒரு சுயேச்சை என மொத்தம் 5 வேட்பாளர்கள் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சேர்ந்த ஏ.பாலாஜி (42) சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி கடலூர் மாவட்டத் தலைவர் வெ.தணிகைச் செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் மார்ச் 26 அன்று இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாள ராக அவருடைய தந்தை கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி 2 பேர் பலி
கடலூர், மார்ச் 26- கடலூர் குண்டு சாலை யில், ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் அருகே உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்தவர் ரவி (47). இவ ரது மனைவி சரஸ்வதி (40). கணவன், மனைவி இரு வரும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறு வதற்காக, ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சண்முகம் (55) என்பவர் ஓட்டி சென்றார். இந்த ஆட்டோ கடலூர் குண்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, புதுச்சேரி மார்க்கத்தி லிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ரவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். படுகாயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சண்முகம் மற்றும் ரவியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர்.
விவோ டி3 5ஜி போன் அறிமுகம்
சென்னை, மார்ச் 26- புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ, இந்தியாவில் அதன் டி மாடல் வரிசையை விரிவுபடுத்தும் வகையில், தனது புதிய விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. டைமென்சிட்டி 7200 மொபைல் இயங்குதளத்தால் இயக்கப்படும், இந்த ஸ்மார்ட்போன் தடையற்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படும். அதன் 6.67 அங்குல முழு எச்டி பிளஸ் அமோல்டு திரை, இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் விரைவாக சார்ஜ் செய்ய பயன்படும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இதன் சிறம்பம்சங்கள் ஆகும். இந்த போன் 8ஜிபி மற்றும் 128ஜிபி 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி மற்றும் 256ஜிபி 21,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாகனம் மோதி மாணவன் பலி
கடலூர்,மார்ச் 26- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடம்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்-சூர்யா தம்பதிக்கு சந்தோஷ் மற்றும் சந்துரு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சந்தோஷ் வயது 10 அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். திங்களன்று இரவு அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்களுக்கு திரைப்படம் காண்பிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சாலையோரத்தில் அமர்ந்து படம் பார்த்த சூர்யா மீது எதிர்பாராத விதமாக டாட்டா ஏசி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவன் உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னையில் 52 வேட்பு மனுக்கள்
சென்னை, மார்ச் 26- வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பிரச்னை குறித்த கேள்விக்கு, “வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே அனுமதிக்கப் படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா, அரசியல் கட்சிகளின் குழப்பமா அல்லது தேர்தல் நடத்தும் அலுவ லரின் கவனக் குறைவா என்று விசாரணை அறிக்கை கேட்டுள்ளோம். இதுவரை வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு 23 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 52 மனுக்கள் பெறப்பட்டுள்ளன” என்றார்.
கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
செய்யூர், மார்ச் 26- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பனையூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரவின் (17). இவரது நண்பரும் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த முகமதுசாதிக் ஆகிய இருவரும் 11ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலை யில், இருவரும் செய்யூர் அடுத்த பனையூர் பகுதியில் உள்ள கடலில் திங்களன்று குளித்ததாக தெரிகிறது. அப்போது, பேரலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர். சிறிதுநேரத்தில் இருவரும் கடலில் மாயமாகி னர். தகவல் அறிந்த செய்யூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மாயமான நபர் களை தேடும் பணியில் ஈடு பட்டனர். பின்னர், அதேப்பகுதியில் இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின. இதையடுத்து, உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற் கொண்டுள்ள னர்.
வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை
சென்னை, மார்ச் 26- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிக ளுக்கு விடுமுறை விடப்படும். மார்ச்.30 சனிக் கிழமை மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும். 31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்று பெரும்பாலான வங்கி கள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும். ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்ப தற்காக பொதுமக்களுக் கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழி யர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கி கள் தொடர்ச்சியாக மூடப்படு வதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.
நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்
சென்னை, மார்ச் 26- தனியார் தொலைக் காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிர பலமடைந்த நகைச்சுவை நடிகர் சேசு (60) உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாயன்று (மார்ச் 26) காலமானார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் சேசுவுக்கு திடீரென மார டைப்பு ஏற்பட்டதை யடுத்து சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பல னின்றி செவ்வாயன்று கால மானார். அவரது மறைவு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.