districts

புதுச்சேரி - கடலூர் சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது

புதுச்சேரி, மே 8- புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டிருந்த 8 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய் துள்ளனர். புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடி வேல், இவர் அதே பகுதி யில் மீன் கடை நடத்தி வருகி றார். இந்நிலையில் வடிவேல்  வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற் காலை 3.30 மணியளவில் கடலூர்-புதுச்சேரி சாலை கிருமாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வடிவேலுவை வழி மறித்து, அவரிடம் இருந்த செல்போன், அவர் அணிந்திருந்த வெள்ளி குருமாத் ஆகியவற்றை பறி முதல் செய்து சென்றுள்ள னர். இதுகுறித்து வடிவேல் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் புதுச்சேரி - கடலூர் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நான்கு  மோட்டார் பைக்கில் 8 வாலி பர்கள் வழிபறி நடைபெற்ற நேரத்தில் அந்த வழியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பைக்  எண்ணை வைத்து புதுச்சேரி யின் வெவ்வேறு பகுதிகளை  சேர்ந்த குமரகுரு, ரமணா, அர்ஜுன், பாலாஜி, ஏழு மலை, விஷ்ணு, ஜெய மூர்த்தி, விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடந்த மாதம் தவ ளகுப்பம் பகுதியில் கோழி  கடை ஒன்றை உடைத்து பணம் திருடியது மற்றும்  அதே பகுதியில் தொடர்ந்து  வழிபறியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து  8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;