சென்னை,நவ.29- வள்ளுவர் கோட்டத்தை புனர மைக்கும் பணிகள் 75விழுக்காடு நிறை வடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறி வுறுத்தியுள்ளார். வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த அமைச்சர் எ.வ.வேலு வள்ளுவர் கோட்டப் புனர மைக்கும் அனைத்து பணிகளை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறிய தாவது: தோரணவாயில் முகப்பில், அழகு மிளிரச் செய்யும் ஸ்தபதிகளின் பணிகளை பார்வையிட்டு, துரிதமாக முடிக்க வேண்டும். மின் பணிகள் பெரும்பகுதி முடிவடைந்துள்ளது. கலையரங்கம், குறள் மணிமண்டபம், தோரணவாயில் கட்டடங்களில் நடை பெற்று வரும் மின் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பல்லடுக்கு வாகன நிறுத்துமிட கூரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது, கலை யரங்கத்தில் பால்ஸ் சீலிங் பணி மற்றும் வால்பேனலிங் பணிகள் நடைபெற்று வருகிறது. பொது மக்கள், பார்வை யாளர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி னார்.