districts

சென்னை முக்கிய செய்திகள்

கொடுங்கையூரில் கஞ்சா ஆயில்  விற்பனை செய்த 7 பேர் கைது

சென்னை, நவ. 11- சென்னை கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா மற்றும் விலை உயர்ந்த கஞ்சா ஆயில் பயன்படுத்தப்படுவதாக போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.   இதையடுத்து கொடுங்கையூர் காவல் துறையினர், எம்.ஆர்.நகர் வடிவுடையம்மன் கோவில் தெரு, மீனாட்சி தெரு சந்திப்பு ஆகிய பகுதியில் சோதனை நடத்தி 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரையும் காவல் நிலை யம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி யதில், கொடுங்கையூர் வடிவுடையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்பாபு (எ) பாபு (33), காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சாய்சரண் (30), பாடி குமரன் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (20) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 100 மில்லி கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருவிக. தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாம் (27), பிரசன்னா (25), பெரியபாளையம் பகுதியை சேர்ந்த சுபின்ராஜ் (34) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியிடம் கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ள னர். இதையடுத்து கைது செய்யப்பட்ட வர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்பு டைய மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பொறியியல் படிப்பு : எஸ்.ஆர்.எம் நுழைவுத்தேர்வு

சென்னை, நவ.11- பொறியியலுக்கான எஸ்.ஆர்.எம் நுழைவுத்தேர்வு (எஸ்.ஆர்.எம் ஜே.இஇ) 2025 - எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,  பி.டெக் மற்றும் ஒருங்கிணைந்த எம்.டெக் திட்டங்க ளில் சேர்வதற்கான கட்டம் I (காட்டாங் குளத்தூர், ராமாபுரம், டெல்லி -என்சிஆர் வளாகம் - காசியாபாத் (உ.பி), வட பழனி, மற்றும் திருச்சிராப்பள்ளி வளா கங்கள்) சோனிபெட் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் - ஆந்திரப் பிர தேசத்தில்,  2025 ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 27 வரை நடைபெறவிருக்கிறது. இதில் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். 2025ஆம் ஆண்டிற்கான தேர்வு, ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் மூன்று கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். முதல் கட்ட நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 16.04.2025. இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் – 06.06.2025. மூன்றாம் கட்ட நுழைவுத்  தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் – 30.06.2025 இந்த நுழைவுத்தேர்வு, Remote Proctored Online Mode (RPOM) பயன்முறையில் நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் மூலம் தேர்வில் பங்கு பெறலாம் என்று பல்கலை கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நுழைவுத் தேர்வில் முதலிடம் பெறு பவர்களுக்கு நிறுவனர் உதவித்தொகை (100 விழுக்காடு கல்விக் கட்டணத் தள்ளு படி, 100 விழுக்காடு விடுதிக் கட்டணத் தள்ளுபடி) மற்றும் தரவரிசைகளின் அடிப்ப டையில் 100விழுக்காடு முதல் 25விழுக்காடு வரையிலான கல்விக் கட்டணத் தள்ளு படி, ஆகியவை வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்க ளுக்கு, www.srmist.edu.in இணைய தளத்தை அணுகவும்.

தங்க நகைக்கு பதில் கவரிங் நகை: மாயமான ஊழியரை தேடும் போலீஸ்

சென்னை, நவ. 11-  தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலையில் ஒரு பிரபலமான நகைக் கடை செயல்படுகிறது. இந்த கடையின் நிர்வாகி ஜோ.சுரேஷ் ஜெயின், பாண்டி  பஜார் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில்,  எனது கடையில்  இருந்த தங்க நகைகள்,வைர நகைகள் ஆகியவை தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்க,வைர நகைகளுக்கு போலியான கவரிங் நகைகள் இருப்பது தெரியவந்தது.  இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில்  காவல் துறையினர்   வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தீபாவளி விற்பனையை ஒட்டி, அந்த கடைக்கு புதிதாக சில ஊழியர்களை வேலைக்கு சேர்ந்திருப்பதும், அதில் ஒரு பெண் ஊழியர்தான் தங்க,வைர நகைகளை திருடிவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த ஊழியர், அக் கடையில் பணியில் சேரும்போது கொடுத்த முகவரிச் சான்றிதழ்,அடையாள சான்றிதழ் போலியானவை என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  காவல் துறையினர்  தலைமறைவாக இருக்கும் அந்த பெண் ஊழியரை தேடி வருகின்றனர்.

கால்நடை மருத்துவ கல்லூரி  சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு

சென்னை, நவ. 11-  சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கடந்த 1903 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் தொடங்கப்பட்ட மூன்றாவது கால்நடை மருத்துவ கல்லூரி ஆன இது தொடங்கி 121 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உரை வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரியின் செழுமையான பாரம்பரியம் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் அஞ்சல் உரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு  கூலியை  உயர்த்தி வழங்கவேண்டும் சிஐடியு வலியுறுத்தல்

கடலூர், நவ.11- குடியாத்தத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவது போல் கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். தட்சிணாமூர்த்தி கைத்தறி துறை உதவி இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் குடியாத்தம் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி களுக்கு தற்போது 45 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்ட நெசவாளர்களுக்கு ரூ. 31.25 பைசா மட்டுமே ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே கடலூர் மாவட்ட நெசவாளர் நலன் கருதி ஒரே ரகத்திற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை இல் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி கடலூர் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி ரகங்களுக்கு 45 ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதில் வழக்கறிஞர்களுக்கு பிரச்சனை உள்ளதா? ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.11-  புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு மேற் கொள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வழக்கறி ஞர்கள் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள் ளனர். புழல் மத்திய சிறையில் உள்ள கைதி களை வழக்கறிஞர்கள் வழக்கு நிமித்த மாக சந்திக்க ஆன்லைனில் முன்கூட் டியே முன்பதிவு செய்ய வேண்டும். கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே வழக்கறிஞர்கள் பேச வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கைதிகளுக்கான சட்ட உரிமை கள் மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, வழக்கறிஞர் கள் கைதிகளுடன் சுதந்திரமாக நேரில் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஆனந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப் பதாவது: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர் களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டி யது சிறைத் துறை அதிகாரிகளின் கடமை. வழக்கறிஞர்ளுக்கும், கைதிகளுக்கும் இடையிலான உரை யாடல் வெளிப்படையாக, நேரடியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கான அரசியலமைப்பு சட்ட உரிமைகள் காக்கப்படும். ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதி கள் இல்லை என பல்வேறு குற்றச்சாட் டுகள் ஏற்கெனவே உள்ளது. எனவே, கைதிகளின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புழல் சிறைக்கு செல்லும் வழக்கறிஞர் களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வழக்கறிஞர் கே.வி.முத்து விசாகன், தமி்ழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வேணு.கார்த்திக்கேயன், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகனகிருஷ் ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் எம்.பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.எஸ்.ரேவதி, லா  அசோசியேஷன் சார்பில் அதன் தலை வர் பி.செல்வராஜ், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறி ஞர் இ.ராஜ்திலக், சிறைத்துறைத் தலை வர் சார்பில் சிறைத்துறை டிஐஜி ஏ. முருகேசன், மனுதாரர் தரப்பு வழக்கறி ஞர் எஸ்.காசிராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் வரும் நவ.16ம் தேதியன்று புழல் சிறையில் நேரடி களஆய்வு மேற்கொண்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வசதி, வாய்ப்புகள் குறித்து வரும் நவ.21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறி்ப்பாக வழக்கறிஞர்கள் கைதிகளை சுதந்திரமாக சந்தித்து அவர்களுக்கான குறைகளைக் கேட்க முடிகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். தவிர தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட குழு உறுப்பி னர்கள், சிறைத்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறை யில் தங்களது அறிக்கையையும் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.