districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ ரயில்களில் 67 லட்சம் பேர் பயணம்

சென்னை,மே 2-  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நடப்பு ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் மட்டும் கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23,39,724 பயணிகள், பயண  அட்டைகளை பயன்படுத்தி 39,83,119 பயணி கள், டோக்கன்களை பயன்படுத்தி 3,56,489 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4,136 பயணிகள் மற்றும் சிங்கார  சென்னை அட்டையை (தேசிய பொது  இயக்க அட்டை) பயன்படுத்தி 1,964 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது 

சென்னை,மே 2-  சென்னை ஓட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் செவ்வாயன்று காலை பெய்த மழையால் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை யினர் சம்பவ இடத்துக்கு  சென்று கட்டிடத்தின் அருகில் யாரும் செல்லாத படி பார்த்துக் கொண்டனர். பின்னர் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது.

சோழிங்கநல்லூர் மாதர் சங்க மாநாடு

சென்னை, மே 2 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி 12வது மாநாடு ஞாயிறன்று (ஏப்.30)  பெருங்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத்  தலைவர் எஸ்.சரவண செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் பகுதி தலைவராக மணிமேகலை, செயலாள ராக எ.சாந்தாதேவி, பொருளாளராக பானுபிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மஞ்ச பைகளை பயன்படுத்துங்கள்: ஆட்சியர்

கிருஷ்ணகிரி, மே 2- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.  இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆட்சியர், “ இம் மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும்,பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

திருநங்கைகளின் குறைகளை கேட்க 24 மணி நேரமும் அலுவலகம் திறந்து இருக்கும்: அமைச்சர் உதயநிதி

விழுப்புரம், மே 2-  திருநங்கைகள் குறை களை கேட்க எனது அலு வலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மிஸ்கூவாகம் 2023 அழகி போட்டி நடை பெற்றது. தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்து பேசுகையில், “ஆண்டு தோறும் மிஸ்கூவாகம் நிகழ்ச்சி நடைபெற்று வரு கிறது. இந்த நிகழ்ச்சி பொழுது போக்குக்காக நடைபெற வில்லை. திரு நங்கைகள் திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது”என்றார். திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருநங்கைகள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேர மும் எனது அலுவலகம் காத்திருக்கிறது. திரு நங்கைகள் குறைகளை கேட்பதற்கு எனது அலுவ லகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். வருங் காலத்தில் எம்.எல்.ஏ., எம். பி.க்களாகவும் திருநங்கை கள் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதி வேந்தன், மாவட்ட ஆட்சி யர் பழனி, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, பொன். கவுதம சிகாமணி எம்.பி. உள்ளிட் டோர் பலர் கொண்டனர்.