சிதம்பரம், மே 1- நூறு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமூகத்திலும் உள்ள ஏழை-எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய சிந்தனையால் நந்தனார் பெயரில் சிதம்பரம் நகரில் கல்வி நிறுவனங்களை நிறுவியவர் சுவாமி சகஜானந்தா. தொடர்ந்து 35 ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றிய சுவாமி சகஜானந்தாவின் சேவை களை போற்றும் வகையில் தமிழ்நாடு சார்பில், அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது. அதன்படி, சுவாமி சக ஜானந்தா வின் 64-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மே 1 அன்று நடைபெற்றது . அவரது சிலைக்கு சுவாமி ஏ.எஸ். சக ஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏ.எஸ் சுவாமி சகஜானந்தா பணி நிறைவுப் பெற்றோர் சமூக நல அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கி ணைப்பாளர் பாலையா, துணைத் தலைவர் கருணாகரன், நிர்வாகிகள் விமலக்குமார், துரைசாமி, பசுபதி, ஜெயச்சந்திரன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.