ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் மாயம் : காவல்துறை தகவல்
சென்னை, மார்ச் 21- தென்காசி மாவட்டம் குலசேகரப் பட்டியைச் சேர்ந்த விவசாயி திரு மலை. இவர் காணாமல் போன தனது சகோதரரை மீட்டுத்தர கோரி உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணி யாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைபேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என கேட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலை யத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையம் மிகவும் தாமத மாக விசாரித்து வருவதாக கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில் காவல்துறை விசா ரணையை துரிதப்படுத்தி காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு நீதி மன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் குறித்த விசா ரணையை விரைவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதி, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
காலமானார்
திருவள்ளூர், மார்ச் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் காக்க வாக்கம் கிராமத்தை சேர்ந்த மா.செல்வராஜின் தந்தை மாசிலாமணி (வயது 82), வியாழனன்று (மார்ச் 21), உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் பி.ரவி, எழிலரசன் , என்.கங்காதரன், ஏ.பத்மா, தீக்கதிர் தர்மபுரி மாவட்ட செய்தியாளர் லெனின், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், கிளைச் செயலாளர் ஏகாம்பரம், ஜெயசித்ரா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் காக்கவாக்கம் கிராமத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது
ஆரெஞ்சு சுவை சாக்லேட் அறிமுகம்
சென்னை, மார்ச் 21- இந்தியாவில் மிட்டாய் தயாரிப்பில் முன்னணி நிறு வனமான லோட்டே இந்தியா, லோட்டே சோகோ பைரியல் ஆரஞ்சு என்ற புதிய சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் மிலன் வாஹி, “சாக்கோ பையின் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றும் சுவையான இனிப்பை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி யடை கிறோம் என்று கூறியுள்ளார்.
செலவின பார்வையாளர் விபத்தில் உயிரிழப்பு
கடலூர்,மார்ச் 21- கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் உதவி செல வின பார்வையாளராக நிய மிக்கப்பட்டவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் ஒன்றில் பணிபுரியும் சேது மாதவன் (57) என்பவர் கடலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பகுதியில் உதவி செலவின பார்வை யாளராக நியமிக்கப் பட்டார். அவர் புதனன்று குள்ளஞ்சாவடி அருகே வன்னியர் பாளையம் என்ற இடத்தில்மினி வேன் இருசக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேதுமாதவன் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.
செல்போன் டவர் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
விழுப்புரம், மார்ச் 21- விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 14 ஆவது வார்டு சாமுண்டீஸ்வரி நகரில் குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் 20-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் தனிநபர் ஒருவர் அவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் கோபுரம் வைக்க முயற்சிக்கிறார். எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள், முதியோர், இருதய நோயாளிகள் உள்ளனர். இந்த கோபுரத்தால் எங்களது மக்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்டு செல்போன் கோபுரம் வைப்பதற்கு அனுமதி வழங்ககூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மார்ச் 25 அனுப்பப்படுகிறது
திருவண்ணாமலை,மார்ச் 21- திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரும் 25 கணினி முறையில் குலுக்கல் நடத்தி 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் இவை திறக்கப்படும். பின்னர் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பப்படும். செய்யாறு சட்டமன்ற தொகுதி வாக்குபதிவு இயந்திரங்கள் செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், மற்ற 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.