districts

சென்னை முக்கிய செய்திகள்

மதுராந்தகம் நகராட்சியில் 6 புதிய குடிநீர் கிணறுகள்

 மதுராந்தகம், ஏப். 19-  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநி யோகம் செய்ய ஒன்றிய மாநில அரசின் 2021-22  ஆண்டின் அம்ருத் திட்டத் தின் கீழ் 30 கோடியே 40  லட்சம் மதிப்பீட்டில் மதுராந் தகம் ஏரியில் புதியதாக 6. குடிநீர் கிணறுகள் மூலம்  24 மணி நேரமும் குடிநீர்  விநியோகம் செய்வதற்கான துவக்க நிகழ்ச்சி மதுராந்த கம் நகர மன்ற தலைவர்  மலர்விழி குமார் தலைமை யில் நடைபெற்றது. விழா வில் காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் ஜி.செல் வம் கலந்து கொண்டு பணி யினை தொடங்கி வைத்தார்.

திரைப்பட நகரம்  ஆட்சியர் ஆய்வு

சென்னை,ஏப்.19-  பையனூர் திரைப்பட நகரம் பணிகளுக்கு விரை வில்  முதலமைச்சர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்ட உள்ளார்.  அதற்கான பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தென்னிந்திய திரைப்பட  தொழிலாளர் சம்மேளன  (பெப்சி ) துணைத் தலைவ ரும் இசையமைப்பாளரு மான தீனா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீனா பையனூரில் அமைக்கப்படுகின்ற திரைப் பட நகரத்தின் நுழைவு வாயில் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது என்றார்.

10 லட்சம் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்ய திட்டம் 

சென்னை, ஏப்.19- கடந்த ஆண்டு ‘மேட்  இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக விவோ இந்தியா நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட்போன்கள் தாய்லாந்து மற்றும் சவுதி  அரேபியாவிற்கு ஏற்றுமதி  செய்யப்பட்டன.  அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய இந்நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் இந்தியாவில் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது என நிறுவனத்தின்  செய்திக்குறிப்பு தெரிவிக்கி றது.

மாவட்டஆட்சியரின் அநாகரிக செயலுக்கு விவசாயிகள் கண்டனம்  

ஏப் 21 திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,ஏப்.19- விவசாயிகள் கருத்துகேட்பு கூட்டத்தில் நியாயமான கோரிக்கைக்காக பேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசனை குண்டுக்கட்டாக வெளியேற்றிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஏப் 21 அன்று அனைத்து விவசாயிகள் பங்கேற்கும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு, திண்டிவனம் முதல் நகரி வரை செல்லக்கூடிய புதிய ரயில்வே பாதைக்காக நிலம் இழக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு பாதிக்கப்படக்கூடிய ஒவ்வொரு விவசாயிகளும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கடந்த மார்ச் 29 அன்று விழுப்பும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திரு வள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் இழப்பீடு கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணா மலை மாவட்டம், ஆரணி வட்டம் இரும்பேடு கிராமத்தில் திண்டிவனம் முதல் நகரி வரை ரயில்வே பாதை அமைய உள்ள நிலத்தில் பாதிக்கப்படுகின்ற விவ சாயிகள், வீடுகளை இழக்கின்ற மக்கள் இவர்களுக்கான இழப்பீடு தொடர்பான கூட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாயன்று (ஏப்.18) நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன்,  மாவட்டப் பொருளாளர் ஆ.உதயகுமார், தாலுக்கா தலைவர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வெங்கடேசன் பேசுகையில், இந்த திட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்க்கவில்லை. ஆனால், நிலத்தை இழக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசாங்கத்தின் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் படி இழப்பீடு வழங்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிருக்கும் போதே  ஆட்சியர் குறுக்கிட்டு உங்கள் பேச்சை நிறுத்துங்கள் என்று சொல்லி அவர் கையில் உள்ள மைக்கை பிடுங்குங்கள் என உத்தரவிட்டார். தொடர்ந்து கோரிக்கை களை வலியுறுத்தி பேச முற்பட்டபோது காவல்துறையினர் மூலமாக வெங்கடே சனை குண்டுக்கட்டாக தூக்கி கூட்டத்தி லிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இத்தகைய இழிவான செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மாவட்ட ஆட்சியத்தலைவரின் ஜனநாயக முறை யற்ற இத்தகைய செயலை கண்டித்து வரும் வெள்ளியன்று (ஏப்.21) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்கும்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட விவசாயிகளை பேசவிடாமல் தடுத்து கூட்டத்திலிருந்து வெளியேற்றிய செயலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடி தடைக்கால நிவாரணத்தை  ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்குக

புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி.ஏப்.19- புதுச்சேரியில் மீன் பிடி தடைக் கால நிவாரணம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி புதுச்சேரியில்  ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான கால அளவில் (61 நாட்கள்) புதுவை பிரதேச கிழக்கு கடல் பகுதியில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் - புதுக்குப்பம் வரையில் இழுவலைகள் மற்றும் இழுமடி வலைகளை கொண்டு விசைப்படகில், எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிப்பது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்க ளுக்கு, புதுச்சேரி அரசு வழங்கும் ரூ.6500  போதுமானது அல்ல. ஏற்கனவே 45 நாட்கள் என்றிருந்த நிலையில் 2017-ம் ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களில் 360 விசைபடகுகளும், ஆழ்கடலுக்கு செல்லும் 50 பெரும் விசைப்படகுகளும், மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 19 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் உள்ளன. இக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை பழுது பார்க்கும்  செலவுகளும் அதிகரித்து உள்ளன. வருமானம் இல்லாத நிலையில் மீனவ குடும்பங்கள்  பட்டினியால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே தற்போது அரசின் நிவாரண தொகை ரூ.6500  ல் இருந்து ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியால்  பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர். எனவே ரூ. 5,500 ல் இருந்து ரூ. 1000 மட்மே உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. எனவே மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் என்பதை இந்த ஆண்டிலிருந்து அமல்படுத்த வேண்டுமென புதுச்சேரி முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்எல்ஏக்கள்  ஓய்வூதியம் உயர்வு புதிய சட்டமன்றம் கட்டப்படும்!

சென்னை,ஏப்.19- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.19)  நிதித்துறை. திட்டம் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.   அப்போது பேசிய உறுப்பினர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசுக்கு தற்போது உள்ள நிதி நெருக் கடியை கருத்தில் கொண்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் 12,500 ரூபாயிலிருந்து 15ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் மருத்துவ செலவுக்கான தொகை 50ஆயிரம் ரூபாயி லிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.  அவரைத் தொடர்ந்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன்," இந்த ஆட்சியில் வெகு விரைவில் புதிய சட்ட மன்றம் கட்டப்படும் என்றார். தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு ஊதியத்தை உயர்த்த முடியவில்லை ஆனாலும் பிறகு இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.   சட்ட மன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் தலை வர்களை புகழ்ந்து பாடுவதையும் வர்ணிப்பதையும் தவிர்த்து விட்டு மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.