districts

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 பேர் பலி

திருவண்ணாமலை, ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே காரரும் லாரியும்  நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த 7 ஆண்கள், 2  பெண்கள் 2 குழந்தைகளுடன்  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  அருகே உள்ள குலதெய்வ மாரியம்மன் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் முனியந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே வரும்போது, போளூரி லிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி சென்று  கொண்டிருந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த  விபத்தில் காரில் பயணம் செய்த 1 ஆண், 4 பெண்கள் மற்றும் 1 குழந்தை  உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பெண்கள், 1 ஆண் வேலூர் அடுக்கும்  பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை யும் பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் மற்றும் சந்தவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;