districts

img

50 தொழிலாளர்கள் பணி நீக்கம்: மீண்டும் பணி கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு,பிப்.21- செங்கல்பட்டு மாவட்டம்,  மறைமலைநகர் தொழிற் பேட்டை செங்குன்றம் பகுதி யில் செயல்பட்டு வரும் டீஜங் மோபார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தென் கொரிய  நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  ஊதிய உயர்வு கேட்ட தற்காக கடந்த 2022 மே மாதம் 22 தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்தது. உள்விசாரணை நடை பெறும் காலத்தில் தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய பிழைப்பூதியத் தையும் வழங்கவில்லை.   டீஜங் மோபார்ட்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத, சட்டவிரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட 50 தொழிலா ளர்களுக்கும் மீண்டும் உடனடியாக வேலை வழங்க வேண்டும், இதில் 22 தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பிழைப் பூதியத்தை உடனடியாக வழங்கவேண்டும், தொழி லாளர்களின் வைப்பு நிதியான பிஎப் பணத்தை செலுத்தாத நிர்வாகத்தின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் ஆட்டோ தொழி லாளர் சங்க ஒன்றிய செய லாளர் சம்பத் தலைமையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகில் செவ்வாயன்று (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, சிஐடியு நிர்வாகிகள் செல்வராஜ், நடராஜ் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.