ஆழ்வார்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள இரண்டு மின் மாற்றிகளை சுற்றி 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை புதனன்று (மார்ச் 13) 123 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். சரஸ்வதி தொடங்கி வைத்தார். சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், வார்டு சபா உறுப்பினர் பி.ரவி, திமுக கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் விஜய் வெங்கட் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.