விழுப்புரம், ஜூலை 1- திண்டிவனம் அருகே உள்ளது வீடூர் அணை. இதன் மேற்கு பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தைல மரக்காடு உள்ளது. இதனை வனத்துறை பராமரித்து வருகின்றது. இங்குள்ள மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்த தும் விக்கிரவாண்டி தீய ணைப்பு நிலைய அலு வலர் சுந்தரேஸ்வரன் தலை மையில் சம்பவ இடத்துக்கு வந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்ற னர். இருப்பினும் மரங்கள் அடர்த்தியாக இருந்த தால் தீ அனைத்து மரங்க ளுக்கும் பரவியது. இதனால் சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் காற்றும் அதிகமாக வீசியதால், தீய ணைப்பு வீரர்க ளால் தீயை அணைக்க முடிய வில்லை. இந்த தீ விபத்தில் சுமார் 30 ஏக்கர் தைல மரங் கள் முற்றிலும் எரிந்து சாம்ப லானது.