சென்னை, காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை
சென்னை, ஆக. 2- சென்னை,காஞ்சிபுரத்தில் இன்று மின்தடைபடும் இடங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக அம்பத்தூர், ராமாபுரம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், கே.கே நகர், கிண்டி, ஆலப்பாக்கம், போரூர், மாங்காடு, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடைபடும் என்றும் காஞ்சிபுரம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதி களான பாலியர்மேடு, வெள்ளைகேட், காரைப் பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்தூர், வையா வூர், இந்திராநகர், வேளியூர், வையாவூர் ஆகிய பகுதி களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
விவோ டெக் தினம் 2024
சென்னை, ஆக. 2- உலகளாவிய புதுமைமிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ இந்தியா நிறுவனம் ‘விவோ டெக் தினம் 2024’-ன் இரண்டாவது பதிப்பை நடத்துவதன் மூலம் இந்தியாவில் அதன் பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை துவக்கி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், புதுமைமிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பில் விவோ சிறந்து விளங்குகிறது, இது இந்திய மொபைல் துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. அனுபவ நிகழ்வின் போது, சந்தையின் தனித்துவமான நுகர்வோர் தேவைகளை அடிப்படையாக புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட சமீபத்திய தொழில்நுட்ப சலுகைகளை விவோ காட்சிப்படுத்தியது. நவீன தொழில்நுட்பம் குறித்து இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் தனித்துவமான பயணத்தை விரிவாக விளக்கிக் கூறினர்.
252 அரசுப் பள்ளிகளில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!
சென்னை, ஆக.2- உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளிக்கல்வித் துறை சார்பில், கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளியன்று (ஆக. 2) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் மடிக்கணினி களை வழங்கிபேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில், “12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்வி பயிலும் மாண வர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடாக இருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான மாண வர்கள் நம் தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவர் எம்ஐடியில் படித்து நாட்டின் மிஷன் மேன் ஆனவர் அப்துல் கலாம். அதேபோல், அரசுப் பள்ளியில் படித்து தற்போது சென்னை ஐஐடியின் விமான பொறியியல் படிக்கப்போகும் பார்த்த சாரதி இந்த நூற்றாண்டின் அப்துல் கலாமாக வருவார். பிஎஸ் தரவு அறிவியல் பாடத்தில் 2021ல் 27 மாணவர்கள் இருந்தனர். 2022ல் 115 ஆக உயர்ந்தது. 2023ல் 147 அரசுப் பள்ளி யில் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடி யில் படிக்கின்றனர். கல்வியில் 2 துறைகள், முக்கியமாக நாட்டிற்கும் தேவையாக உள்ளது. டேட்டா சயின்ஸ் ஏஐ அடுத்த தாக எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவும் முக்கியமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாட்டிற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. அதற்கு தேவையான மனித வளத்தையும், வேலைத்திறன் பெற்ற வர்களையும் தமிழ்நாடு அரசும், சென்னை ஐஐடியும் உருவாக்க வேண்டும். 252 அரசுப் பள்ளியில் எலக்ட்ரானிக் கிட் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பள்ளிக்கு தலா 2 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 9, 10, 11, 12ஆம் வகுப்பில் 100 மாணவர்கள் என 400 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் எலக்ட்ரானிக் பயில்கின்றனர். அதில் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாண வர்கள் 25 ஆயிரம். அவர்களில், 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஆர்வம் வந்தால், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் திட்டத்தில் மிகப்பெரிய பலன் கிடைக்கும். இந்த வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் துவக்கப்படும். நான் முதல்வன் திட்டத்து டன் சென்னை ஐஐடியும் இணைந்து செயல்படுகிறோம். கடந்த மாதம் 9 ஆயிரம் மாணவர்களுக்கு மென்பொருள் பயிற்சி அளித்துள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.