15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தினர். அதன் ஒருபகுதியாக திருவான்மியூர் பணிமனையில் நடைபெற்ற போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசினார்.