districts

img

மாநகர பேருந்துகளில் 12 மணி நேர வேலை முறை

சென்னை, மே 7 - 12 மணி நேரம் வேலை முறையை கைவிட வேண்டும் என்று அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநகர போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்கு நருக்கு, சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்தில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் 669 வழித்தடத்தில் இயக்கப்படுகிறது; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். தொழி லாளர்கள் 8 மணி நேரம் (சிங்கில் ஷிப்ட்), 16 மணி நேரம் (புல் ஷிப்ட்) முறை யில் பணிபுரிகின்றனர். சிங்கிள் ஷிப்டு-க்கு ஒரு வருகை பதிவும், புல் ஷிப்டு-க்கு இரண்டு வருகை பதிவும் வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன்  ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பையடுத்து இந்த முறை கைவிடப்பட்டது. 4 ஆண்டு களுக்கு பின்னர் மீண்டும் 12 மணி நேரம் வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் 1961க்கு மாறாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வகையில், 140க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். தொழிலாளர்களின் உடல் நலன், இயற்கை நியதிக்கும் எதிரானதாகும். சர்வதேச அளவில் ஒரு தொழி லாளி நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலையும், 8 மணி நேரம் ஓய்வும், 8 மணி நேரம் உறக்கமும் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் செய லாகும். எனவே, 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.