விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், 2024-நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.