districts

ஆவடியில் மினி பேருந்து சேவை ‘திடீர்’ நிறுத்தம்

ஆவடி,ஆக.2-

     ஆவடி பேருந்து நிலை யத்தில் இருந்து தினந் தோறும் மொத்தம் 177 பேருந்துகள் இயங்கி வருகிறது. இதில் 14 மினி  பேருந்துகள் ஆகும். ஆவடி யில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அம்பத்தூர், பாரி முனை,பல்லாவரம், ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  

   இந்த நிலையில் ஆவடி யில் இருந்து பெரும்பாலான பேருந்து போக்குவரத்து குறைக்கப்பட்டு இருப்ப தாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே ஆவடி பேருந்து நிலையத்தி லிருந்து திருவேற்காட்டில் இயக்கப்பட்ட மினி பேருந்து (எஸ்52) திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

   இந்த மினி பேருந்து சேவை கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆவடி சந்தை, வசந்தம் நகர், கோவர்தனகிரி, ஐயங்குளம், பருத்திப்பட்டு, சுந்தரசோழபுரம் வழியாக திருவேற்காடு வரை சென்று வந்தது.

   திருவேற்காடு கோவி லுக்கு செல்லும் பக்தர்கள்,  மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த மினி பஸ்சை அதிகம் பயன்படுத்தினர். தற்போது இந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ஆவ டியில் இருந்து அண்ணா  சதுக்கம் வரை செல்லக் கூடிய 40ஏ, 24சி ஆகிய பஸ்க ளும் தற்போது இயங்க வில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ள னர்.