கிருஷ்ணகிரி, ஜூலை 21- ஓசூர் 13 வது புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற “மகளிர் சங்கமம்“நிகழ்ச்சி எழுத்தாளர் மணிமேகலை தலைமை வகித்தார். இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி, ஆசிரியர் தீபிகா, நிர்வாகி மஞ்சுளா,சப்தகிரி பள்ளி முதல்வர் சத்யகலா,மாதர் சங்க பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,வரம் மருத்துவமனை மருத்துவர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாதர் சங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பணியாற்றிய முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரிக்கு ‘பெண் சாதனையாளர்’ விருதை சிவந்தி அருணாச்சலம் வழங்கினார். தூய்மை பணியாளர் சுதா, நிழல்கள் அறக்கட்டளை கண்மணி, குட்டி யானைகள் இலவச பள்ளி நடத்தும் முத்துலட்சுமி, உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கினார்.