சிவகங்கை, பிப்.18- சிவகங்கை மாவட்டம் திருப்புவன ஊராட்சி ஒன்றி யம் கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் தொல் பொருட்களை காட்சிப் படுத்துவதற்காக நடை பெற்று வரும் பணிகளை சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்து துரிதமாக முடிக்கச்சொல்லி உத்தர விட்டார். கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெறும் தொல் பொருட்களை மக்கள் பார்க்கின்ற வகையில் செட்டி நாடு கலை நயத்துடன் முதல் அகழ் வைப்பக கட்டிடம் ரூ. 11.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தொல் பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாக அதற்கான பணிகள் சிறப் பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுற்று லாத்துறை முதன்மைச் செய லாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார். பணி களை விரைந்து முடித்திட வேண்டும் என்று உத்தர விட்டார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவா னந்தம், கீழடி கட்டிட கோட்ட செயற்பொறியாளர் மணி கண்டன், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் உட னிருந்தனர்.