சிதம்பரம், ஏப்.4- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சிதம்பரம் மக்கள வைத் தொகுதியில், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், சிதம்பரம் மேல வீதியில் புதன் கிழமை இரவு வாக்கு சேகரித்து உரை யாற்றினார்.
அப்போது அவர் பேசியதா வது: பாஜக ஒன்றிய அரசு அல்ல; மக்க ளோடு ஒன்றாத அரசு. இதனை அப்பு றப்படுத்த வேண்டும். குரலற்றவர் களின் குரலாக பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். அவரை 10 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
எல்லா சித்தாந்தங்களும் மக்க ளுக்காகத் தான். அதற்காகத் தான் நாங் கள் அனைவரும் தோளுரசி களம் கண்டு வருகிறோம். பாஜக இந்தியாவின் ஜன நாயகத்திற்கு ஆபத்து என்று அறி ஞர்கள் கவலைப்படுவார்கள். நாங்கள் வீரர்கள்.. களம் கண்டு வருகிறோம்.
நாங்கள் தியாகம் செய்யவில்லை வியூ கம் செய்துள்ளோம், இன்றைய தேவை யை அன்றே உணர்ந்து வந்தவர் திருமா வளவன். மானுட சமூகம் பின்னோக்கி இழுக்கப்படுவதை உணர்ந்து, தன் வாழ்வை சமூகத்திற்கு கொடுத்தவர். எதிரிகளை ஜனநாயகப் படுத்துவது என்றால் எதிரிகள் யாருமில்லை என்று உணர்வது தான். சாதியம் தான் என் வாழ்வின் முதல் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் முடிவு செய்துவிட்டேன். சாதிகள் இல்லை.
எனது படங்களில் சாதிப் பெயர் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம், குடியை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் குடி காரனைத் தான் மையப்படுத்த வேண் டும், அது போல தான் இது. இன்னும் எத்தனை பேர் அடிமை விலங்கோடு உள்ளனர் என்பதை அறி யவே சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கி றோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சனாதன வாதிகள் பதறினார்கள். மண்டல் கமி ஷனை வி.பி. சிங் அமல்படுத்த முயன்ற போது அதனைத் தடுக்க முயன்றவர்கள் தான் சனாதனவாதிகள்.
தமிழக மீன வர்களை காக்கத்தவறியது இந்த பாஜக அரசு. 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயி கள் பிரச்சனையில் ஆதார விலையை தராமல், ஆதரவு விலையை தருவ தாக கூறினார்கள், எதையும் செய்ய வில்லை. இதனை எதிர்த்த விவசாயி களுக்கு டிரோன் மூலம் குண்டு வீசி யும் ஆணிப்படுக்கையும் அமைத்து எதிரியைப்போல நடத்தினார்கள். உனக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு நான் நகரத்தில் இருந்தாலும், தினமும் சோறு சாப்பிடுகிறேன் அந்த நன்றிக்கு தான் பேசுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள் ளார்.