districts

img

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

சிதம்பரம், ஜூலை 14- சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக சிதம்பரம் சிபிஎம்  அலுவலகத்தில் அண்ணாமலைநகரில் விசிக, சிபிஎம் உள்ளிட்ட தோழமை கட்சிகள், அனைத்து சங்கங்கள்   கலந்து கொண்ட ஆலோ சணை கூட்டம்  ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி தலைமை தாங்கினார்.  விசிக சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், மாநில நிர்வாகிகள் ஜவகர், நீதி வளவன், பாலையா, சிதம்ப ரம் நகர செய லாளர் ஆதி மூலம், துணை செயலாளர் பெரு.சரித்திரன், சிபிஎம்  சார்பில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், சிதம்பர நகர செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, காங்கிரஸ் கட்சி நகர செயல் தலைவர் தில்லை கோ குமார், சிபிஐ  மாவட்ட நிர்வாகி வி.எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் செய லாளர் சேரலாதன், மனித நேய ஜனநாயக கட்சி ரபிக் உள்ளிட்ட அனைத்து கட்சி களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் உள்ள  மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 26-ந்தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகே அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.