districts

img

கேலோ இந்தியா போட்டி

சிதம்பரம், மார்ச். 1-  கேலோ-இந்தியா பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழக கால்பந்து அணி 2-வது முறை யாக வெற்றிபெற்றது. அசாம் மாநிலம் கவுஹாத்தி யில் கேலோ-இந்தியா பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான  போட்டிகள் பிப் 19 முதல் 29 வரை நடைபெற்றது.

இதில் அண்ணாமலைப் பல்கலைக் கழக கால்பந்து பெண்கள் அணி பங்கேற்று விளையாடியது. இதில் 700-க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக் கழக அணிகள் பங்கேற்றனர்.  லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை அண்ணாமலைப் பல்கலை அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 இறுதி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநாதக் தேவ்பல்கலைக்கழகம் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை 2ஆவது முறையாக வென்றது குறிப்பிடதக்கது.  வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு  வெள்ளியன்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன்  மாலை அணிவித்து வரவேற்றார்.