districts

img

கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மரத்தான் போட்டி

கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மரத்தான் போட்டி நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து பெண் காவலர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. தலைமையிட துணை ஆணையர் சுகாசினி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.  மரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.. கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பாலசுந்தரம் ரோடு,அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் மரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றது.

இதில்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்குக் காவலர் ஆணையர் பாலகிருஷ்ணன் பதக்கங்களை  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து காவல்துறையினரின் பேண்டு வாத்திய இசைக்கு ஏற்றபடி, பெண் காவலர்கள் நடனமாடி உற்சாகமாக மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.