கோவை, ஏப்.25- கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர் களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இதில், வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச் சனைகள், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங் களில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் குழுக்களை அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ண கிரி, குன்னூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் பங்கேற் றனர். இதில், மாநில அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற் சாலை உரிமையாளர், சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி ஒவ்வொரு காலண் டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழி லாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.