districts

img

வேகத்தடை அமைக்க சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எதிர்த்தும்

கோவை, செப். 30- வேகத்தடை அமைக்க கூடாது  என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை  மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அர சியல் பிரமுகரின் செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் பள்ளி நிர் வாகம் வேகத்தடை அமைத்ததால், இச்சாலையில் பயணம் செய்த  இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி  பரிதாபமாக பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து, அவசரஅவசர மாக கோவை மாநகராட்சி வேகத் தடையை அகற்றினர். கோவை மாவட்டம், சூலூர்  பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்.  இவர் சேரன் மாநகரில் டிபார்ட் மென்டல் ஸ்டோர் நடத்தி வருகின் றார். இவர் வெள்ளியன்று இரவு 12 மணி அளவில் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டு  இருந்தார். கொடிசியா அருகே  உள்ள கீதாஞ்சலி பள்ளி அருகே  இரு சக்கர வாகனம் வந்த பொழுது  அங்கு புதிதாக அமைக்கப்பட் டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் உயிரி ழந்தார். இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதி வாகியுள்ளது. வேகத்தடை அமைக் கப்பட்டதற்கான குறியீடுகள் எது வும் இல்லாமல் இருந்த காரணத் தால், இரவு நேரத்தில் வேகத தடை இருப்பது தெரியாமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த, போக்குவரத்து காவல்துறையினர், உடனடியாக வேகத்தடைக்கான குறியீடுகளை வர்ணம் பூசினர். இது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில், தனியார்  பள்ளி நிர்வாகம் சார்பில் கோவை  மாநகராட்சி அனுமதி இன்றி 3  இடங்களில் வேகத்தடை அமைத்து  இருப்பது தெரியவந்தது. இது  தொடர்பாக மாநகராட்சி அதிகாரி களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலை யில்  மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட 3 வேகத்தடைகளையும் அகற் றினர். மாநகராட்சி அனுமதியின்றி வேகத்தடை  அமைக்க கூடாது என  வேகத்தடை அமைக்கும் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கும்போதே, கோவை மாநகராட்சியின் மார்க் சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாமன்ற  உறுப்பினர் ஆர்.பூபதி எதிர்ப்பு தெரி வித்துள்ளார். அச்சமயத்தில் மட்டும் பணியை நிறுத்திய பள்ளி நிர்வாகம், அவர் சென்ற பிறகு அரசியல் செல்வாக்கு உள்ள உள்ளூர் பிரமுகரை அழைத்து வந்து வேகத்தடையை அமைத்து உள்ளனர்.  இதுகுறித்து பூபதி கூறுகை யில், மாநகராட்சி அனுமதியின்றி வேகத்தடை அமைக்ககூடாது என தடுத்து நிறுத்தியும் வேகத்தடை அமைத்துள்ளனர். வேகத்தடை அமைக்கப்பட்ட சில மணி நேரங் களிலேயே ஒரு உயிர் பலியாகி உள்ளது. இளைஞர் பலியான விவ காரத்தில், தனியார் பள்ளி நிர் வாகம், திமுக பிரமுகர் நடராஜன்,  வேகத்தடை அமைத்த நபர்கள் ஆகிய 3 தரப்பினர் மீதும் வழக்கு  பதிவு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். இப்பகுதியை சேர்ந்த இளை ஞர் நகாராஜன் என்பவர் கூறுகை யில், கீதாஞ்சலி பள்ளி இருக்கும்  சாலையில் வேகத்தடை இரவு அமைத்த பிறகு இரவு நேரத்தில்  அடுத்தடுத்து 4 விபத்துகள் ஏற் பட்டது. நான்காவது விபத்தில் வாலிபரின் உயிர் போனது. தலை யில் இருந்து முழுமையாக ரத்தம்  வெளியேறி ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். இப்பகுதியில் வேகத் தடை இல்லாத போது கூட இவ் வளவு விபத்து ஏற்பட வில்லை என நாகராஜன் தெரிவித்தார்.  இதனிடையே, அனுமதி இன்றி  அமைக்கப்பட்ட வேகத்தடை களை அகற்றிய மாநகராட்சி அதி காரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து  குறித்து பீளமேடு  போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.