districts

அரசு செய்து தர வேண்டியதை ஓசி என்பதா? காவல் ஆய்வாளருக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

திருப்பூர், ஜூன் 22 - திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த  வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் எல் லாமே ஓசியில் கிடைக்குமா? என்று  ஏளனம் பேசிய காவல் ஆய்வாள ருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ள னர். இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் எஸ்.வி காலனி பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. எனவே அப்பகுதி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர், எஸ்.வி. காலனியில் ரோந்து பணியை அதிக ரிக்க வேண்டும். கண்காணிப்பு கேம ராக்களை பொருத்த வேண்டும் என்று  கோரியுள்ளனர். இதுதொடர்பாக  அப்பகுதி மக்களிடம் கையெழுத்துப்  பெற்ற கோரிக்கை மனுவுடன் செவ் வாயன்று மாலை திருப்பூர் வடக்கு  குற்றப்பிரிவு ஆய்வாளரை சந்தித்த னர்.  வாலிபர் சங்கத்தின் மாநகரச் செயலாளர் விவேக், மாநகரக்குழு உறுப்பினர் பிரனேஷ், எஸ்.வி. காலனி பகுதி கிளைச் செயலாளர் கிஷோர், கோல்டன் நகர் கிளைச்  செயலாளர் பழனிபாரதி உள்ளிட் டோர் இதில் பங்கேற்றனர்.

மனுவை பெற்ற காவல் ஆய்வா ளர், “குற்றவாளிகளை நீங்களே பிடித்து வையுங்கள் என்றும், கண்கா ணிப்பு கேமரா பொருத்தச் சொன்ன தற்கு, ஓசியிலேயே எல்லாம் கிடைக் குமா என்றும், மக்களிடமே வசூல் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள், என்றும் பொருத்த மற்ற முறையில் அறிவுரை கூறியுள் ளார். காவல் ஆய்வாளரின் இந்த பேச்சு  ஏளனப்படுத்துவதாக வாலிபர் சங் கத்தின் வடக்கு மாநகரக்குழு கடுமை யாக கண்டித்துள்ளது. குறிப்பாக,  குற்றத்தைத் தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டிய காவல் ஆய்வா ளர், நீங்களே நேரடியாக குற்றவாளி களைப் பிடித்து வையுங்கள் என்கி றார். அப்படியானால் அவரது பணி  என்ன என்று கேள்வி எழுப்பினர். அத் துடன் ஒரு பொறுப்புள்ள வாலிபர்  அமைப்பு சார்பாக கோரிக்கைக் காகச் சென்றாலே இவ்வாறு தனது கடமை உணராமல் பேசக்கூடிய ஆய் வாளர், ஏழை, எளிய மக்கள் வந்தால்  எப்படி நடந்து கொள்வார் என்றும் ஐயத்தை எழுப்பி உள்ளனர். குற்றவாளிகளை பிடிப்பது மற் றும்  கண்காணிப்பு கேமரா அமைப் பது உட்பட எல்லா வேலையும் மக் களே செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எதற்கு? அதில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு என்ன  வேலை? என்று கேள்வி எழுப்பியுள் ளனர்.  உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால்  ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராட்டத்தை நடத்த  வேண்டிவரும் என்றும் வாலிபர் சங் கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.