districts

img

கொரோனா தடுப்பு பணியில் வாலிபர் மாணவர் சங்கத்தினர்

கோவை, மே 5 - கோவையில் கொரோனா விழிப்பு ணர்வு மற்றும் தடுப்பு பணிகளில் வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஈடு பட்டனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் சூழ்நிலை யில், கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயி ரத்தை தாண்டி அதிகரித்து வருகிறது. இத்தொற்றை கட்டுப்படுத்த  மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக பொதுமக்க ளுக்கு கபசுர குடிநீர் விநியோகம் மற் றும் கொரானா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதி யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க சிங்கை- பீளமேடு நகரக் குழு செய லாளர்  மணிபாரதி தலைமை தாங்கி னார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.பாண்டியன் துவக்கி வைத் தார். இதில் வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் கே.எஸ்.கனகராஜ், இந்திய மாண வர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலா ளர்  தினேஷ் ராஜா மற்றும் வாலிபர் மாண வர் சங்க  நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர்.

;