districts

img

இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை, ஜன.27- கோவை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளை ஞரின் உடல் உறுப்புகள் தான மாக அளிக்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் காசிபா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் ரங்கசாமி(34). இவர், கடந்த 22ஆம் தேதி நிலைதடுமாறி கீழே  விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந் தார். இதையடுத்து, கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்,  மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து, ரங்கசாமி யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர் கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்ததனர். அதன் அடிப்ப டையில் தமிழ்நாடு உறுப்பு  மாற்று சிகிச்சை ஆணையத் தின் வழிகாட்டுதலின்படி, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக  பெறப்பட்டன. பெறப்பட்ட கல்லீரல் சேலத்தில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கும், ஒரு  சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு  சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப் பட்டன.