உதகை, மார்ச் 30- மலர் செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப்படுவதால் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பெரும்பாலான செடிகளில் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என் உதகை தாவர வியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். கோடை சீசன் நெருங்கிய நிலையில் 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக் களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா நகரமான உத கைக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணி களில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற னர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ப தால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்ற னர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத் தப்படுகிறது. 5 நாட்கள் வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலாப் பய ணிகள் வருகின்றனர். இம்முறை மே மாதம் 17 ஆம் தேதியன்று துவங்கி 22 ஆம் தேதி வரை நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிலை யில், கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவில் பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களை பராமரிக் கும் பணிகளில் நாள்தோறும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு பணி கள் முடிந்த நிலையில் நாள்தோறும் இந்த மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள், உர மிட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பனியின் தாக்கம் குறைந் தால், மலர் செடிகளுக்கு பாதுகாப்பாக தொட்டி களில் வைக்கப்பட்டுள்ள கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப் படுவதால் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும் பாலான செடிகளில் மலர்களை சுற்றுலாப் பயணி கள் கண்டு ரசிக்கலாம் என ஊழியர்கள் தெரி வித்தனர்.