உதகை, ஜூன் 25- பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே உலக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே உலக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இது குறித்து, உதகை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மன நல மருத்துவர் விவேக் பேசு கையில், போதை பொருள் பழக்கத்தால் நீங்கள் வாழ்க் கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர் களோ அதில் ஒரு சதவீதம் கூட இருக்க முடியாது. பலரும் போதை பொருள் குறித்து தெரியாமல் விழுந்து விடுவார் கள். பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள் ளது. இதையும் தாண்டி இந்த பழக்கத்திற்கு அடிமையாக ஒரு போதும் நினைக்கக் கூடாது. என்றார். இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், ‘அடுத்தடுத்து ஓடி கொண்டிருக்கிற ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். யாருக்குமே பொறுமை இல்லை, பொறு மையா இருக்கிற சூழலும் நமக்கு இல்லை. அதனால், என்னமோ ஒரு நிகழ்ச்சியை வேகமாக நடத்த வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். வாழ்க்கையை எதார்த்தமா எடுத்து கொள்ளும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எது வுமே நிரந்தரம் இல்லை. எப்படியோ வாழ்ந்துகிட்டு போக லாம் என்ற சூழல் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு கொண்டி ருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் சிறப் பான நிலைக்கு வர வேண்டியதை தான் கற்றுகொடுத்து வரு கின்றனர். மாணவர்கள் அனைவரும் மாவீரன் நெப்போலி யன் போல் மிக தைரியமாக இருக்க வேண்டும். மாணவர்கள் பற்றிய கவலை எப்பொழுதும் பெற்றோர்களுக்கு இருக்கும். போதை இல்லா சிறப்பான நல்ல சமுதாயம் உருவாக இளைய சமுதாயத்தினரின் பங்கு அவசியம் என்றார். இந்நிகழ்ச்சியில், போதை பொருள்கள் பயன்படுத்து வதால் உண்டாகும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழ கத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து நாடகம் மற்றும் மாணவர்களால் இசை நிகழ்ச்சி நடைபெற் றது. மேலும், போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப்போட்டி, பாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின், கஞ்சா மற் றும் இதர போதை பொருட்களை ஒழிப்பதற்கான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.