கோவை, ஜூன் 16- கோவை, செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் கண் ணாடி கிடங்கு ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்நிலை யில், அந்த கிடங்கில் ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு பெரிய அளவிலான கண்ணாடிகளை ஏற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது கோவை கரும்புக்கடை யைச் சேர்ந்த முஸ்தபா (45), செல்வபுரத்தைச் சேர்ந்த அபுதாகீர் ஆகிய கூலி தொழிலாளிகள் மீது எதிர்பா ராத விதமாக சரிந்தது. இதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இச்சம்பவம் தொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.