தருமபுரி, பிப்.9- மத்திய தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தம் மற் றும் மறியல் போராட்டம் பிப்.16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது குறித்த பிரச்சார இயக்கம் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி யில் நடைபெற்றது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளர், விவசாயி கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பின் சார்பில் பிப்-16 ல் நாடு தழுவிய வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. வேலை நிறுத்த மறி யலை விளக்கி பிரச்சாரம் பாப்பாரப் பட்டியில் நடைபெற்றது. இதில், ஏஐசி சிடியு மாவட்டத் தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சி. முருகன், சிஐடியு கட்டுமான சங்க மாவட் டத் தலைவர் சி.சண்முகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஜனநாயக பொதுத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஜி.முருகன், தருமபுரி மண்டல துணைத்தலைவர் மாதேஷ், ஏ.முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் வேலை நிறுத்தம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.