districts

img

பாதுகாக்கப்படுமா பாரதியார் பல்கலைக்கழகம்?

கோவை, மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில், சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்த  கிராமப்புற மக்களிடமிருந்து நிலத்தை கைப்பற்றி, விவசாய மக்களை வெளி யேற்றி, 1982 ஆம் ஆண்டில் பாரதியார்  பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இன்றளவும் நிலத்தை வழங்கிய ஏழை, எளிய மக்களுக்கு நிலத்திற்கான பணம்  என்பது வழங்கப்படாமல், கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ளது. இது  இருந்த பொழுதிலும் மாணவர்களின்  எதிர்காலத்தைக் கருத்தில் கெண்டு  பொதுமக்கள் இன்றளவும் தங்களது  நிலத்தை கல்வி பயில அளித்துவிட்டு, தங்களது உரிமைக்காக போராடி வரு கின்றனர். இந்தப்பின்னணியில் உரு வான பாரதியார் பல்கலைக்கழகத்தின்  கீழ் சுமார் 150 கலைக் கல்லூரிகள்  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

தலைமையே இல்லாத பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகம் என்பது பல ஆயி ரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களை யும், ஆசிரியர்களையும் உருவாக்க பயன்படுகிறது. ஆனால், அந்த பல் கலைக்கழகத்தை நிர்வகிக்கவே சுமார்  இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர்  என்பது நியமனம் செய்யப்படா மலேயே உள்ளது. துணைவேந்தர் நிய மனம் என்பது மாநில அரசின் உரி மையில் உள்ளது. ஆனால், சமீப கால மாக, தனது அதிகார திமிரை காட்டும் வகையில் துணைவேந்தர் நியமனத்தை  ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். அதேபோல், பதிவாளர் 6 ஆண்டுகளாக இல்லை; தேர்வு கட்டுப்பாட்டு அலுவ லர் 7 ஆண்டுகளாக இல்லை. பல  போராட்டங்களுக்குப் பிறகு தற்போது  இந்த இரண்டு பதவிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த  இரண்டு பதவிகளும் பல்கலைக்கழகத் தின் முக்கியமான அங்கங்கள் என்பதை  நினைவில் கொண்டு, மாநில அரசு சட் டபூர்வமாகவும், நேர்மையாகவும் நிரப்ப வேண்டும். போதிய ஊழியர்களும் இல்லை! பல்கலைக்கழகத்தின் தேர்வுகளை நடத்தவும், புதிய கல்லூரிக்கான அனு மதி வழங்கவும், மாணவர்கள் சேர்க்கை  விண்ணப்பத்தை தயார் செய்வதும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வழங்குவதும் மற்றும் பல்கலைக்கழ கத்தில் உள்ள அனைத்து பணிகளை யும் ஒருங்கிணைக்க சுமார் 482 பணி யாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது பல்கலைக்கழகத்தில் வெறும் 150 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 2001 ஆம் ஆண்டு புதிதாக  68, 2008 ஆம் ஆண்டு 11 இடங்களை  மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் நிரப்பியுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக  பல்கலைக்கழகப் பணிகளை மேற் கொள்ள ஊழியர்களை நியமிப்பதே இல்லை. ஏறக்குறைய 350க்கும் மேற் பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதன் காரணமாக, இந்தாண்டு தேர்வு  முடிவுகள் என்பது மிகவும் தாமத மாகவே வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள் பலர் பாதிப்புக்குள்ளாகி னர். எனவே, பாரதியார் பல்கலைகழகத் தில் நிலவி வரும் ஊழியர்கள் பற்றாக் குறையை போக்க தமிழக அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்

“எண்ணிய முடிதல் வேண்டும்” என்ற இந்த வாசகம் பாரதியார் பல் கலைக்கழகத்திற்கு முன் எழுதப்பட்டி ருக்கும். எண்ணங்களை நிறைவேற்ற  வேண்டும் என்கிற அர்த்தத்தில் எழுதப்  பட்டிருக்கும் இந்த வாக்கியத்தை, பல்  கலை கழக நிர்வாகம் தவறாக புரிந்து கொண்டேதோ என்பதைப்போல, இங் குள்ள அனைத்து பணிகளுக்கும் ‘எண்ணி கொடுத்தால் மட்டும்தான் பணி’ உறுதி செய்யப்படும் என்ற நிலைமை உள்ளது. தனக்கு தேவை யான பதவியை அடைய எண்ணி கொடுத்தால் போதும் என்ற போக்கு பல்கலைக்கழகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. 2018 ஆம் ஆண்டு கணபதி  என்ற துணைவேந்தர், முறைகேட்டில் ஈடுபட்டு லஞ்ச ஒழிப்பு துறையினால் கைது செய்யப்பட்டார். மேலும், அங்கு பணிபுரியும் ஒரு சில பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப் படும் உதவித்தொகையை (fellowship  பணம்), வகுப்பிலுள்ள அனைவருக் கும் பிரித்துதர வேண்டும் என்ற நிபந்த னையை, ஆராய்ச்சி மாணவர்களின் மீது தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கின்றனர். ஆராய்ச்சி படிப்பை தொடர் வதற்காக அரசு அளிக்கும் ஊக்கத் தொகையை பிரித்துத்தர சொல்வது அதிகாரத்தின் உச்சமாகும். மேலும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி படிப்பை முடிக்கவும், ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும்.

ஆய்வாளர் (அ) வேலையாட்கள்

ஆய்வு, சேவை, கற்பித்தல், தொழில் வளர்ச்சி, நேர்மை, வாழ்நாள்  முழுவதும் படிப்பு, கல்வி மற்றும் கற் பித்தல் திறன் என்று பல்வேறு திறமைக ளுடன் வரும் மாணவர்களை, பாரதி யார் பல்கலைக்கழகம் மற்றும் வேறு  சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்  ஆராய்ச்சி மாணவர்களாக பார்ப்ப தில்லை; நடத்துவதுமில்லை. ஒரு ஆய்வு மாணவனை தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துவது மட்டு மில்லாமல், வீட்டில் உள்ள அனைத்து பணிகளையும் (பாத்திரம் கழுவுவதில் ஆரம்பித்து, பாத்ரூம் கழுவுவது வரை யிலும்) செய்ய கட்டாயப்படுகின்றனர்.  இது மட்டுமில்லாமல் அந்த மாணவனை  முழுமையாக தனது வீட்டு வேலைக்கா ரன் போல் பயன்படுத்துகின்றனர். அதை யும் மீறி ஒரு சில மாணவர்கள் கேள்வி  கேட்டால், அந்த மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பு என்பது பாதி யிலேயே நின்று விடுகிறது. ஆசிரியர் கூறும் பணியை செய்யவில்லை என் றால், மாணவர்கள் ஆராய்ச்சி செய்வ தற்கு தேவையானப் பொருட்களை வழங்குவதில்லை. தங்களின் பேச்சை  கேட்காத மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பை முடிக்க காலம் தாழ்த்தி வரு கிறார்கள். அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்ட  மாணவர் ஆளுநரிடம் புகார் அளித்த தன் மூலம், இப்பிரச்சனை எவ்வளவு பெரியது என்பது தெரியவருகிறது.

மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது

‘VIVA’ என்பது தேர்வு என்பதையே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில்  ஆய்வு மாணவருக்கு உதவியாளராக (Guide ஆக) இருபவர்கள் மறந்துவிட்ட னர். ‘VIVA’ என்று வந்தாலே அது ஏதோ திருமணம், காதுகுத்து நிகழ்ச்சி போல நடத்த ஆராய்ச்சி மாணவர்களிடம் கட் டாயப்படுத்துவது; பெரிய பெரிய நட் சத்திர ஹோட்டல்களில் விருந்து வைக் கக்கோரி ஆணையிடுவது; போன்ற பல்  வேறு முறைகேடான தவறுகளை பல ரும் செய்து வருகின்றனர். ஆய்வை முடித்து தர வேண்டும் என்றால், மாண வரிடம் லஞ்சம் கேட்பது; சாதிய கண் ணோட்டத்தில் ஆராய்ச்சி மாணவர்களி டம் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்  வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தொலைந்து போன தொலைதூர கல்வி

தொலைதூரக் கல்விக்கூடம் பார தியார் பல்கலைக்கழகத்தில் 1991-1992 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. தொலைதூரக் கல்வி என்பது, இந்தி யாவில் பிறந்த அனைத்து மாணவர்க ளும் உயர்கல்வி பயில வேண்டுமென்ற  ஒரு உன்னத நோக்கத்தில் தான். அவ் வாறு பாரதியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டு கொண்டிருந்த தொலைதூர பள் ளிக்கூடம், இன்று அனாதைக் கூட மாக செயல்பட்டு வருகிறது. சில ஆண்டு களுக்கு முன்பு தொலைதூர கல்வியில்  பல்வேறு திருத்தங்களை யுஜிசி கொண்டு வந்தது. அதில் தற்பொழுது  தமிழகத்தில் 22 பல்கலைக்கழகங்க ளுக்கு மட்டும் குறிப்பிட்ட துறைக ளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள் ளது. கல்வி வணிகமயம் மற்றும் பல் வேறு குடும்ப சூழல்கள் காரணமாக, உயர்கல்வியை தவறவிடும் மாண வர்களை கருத்தில் கொண்டு, அனைவ ருக்கும் உயர்கல்வியை கொண்டு செல்ல, பல்கலைக்கழகம் உட்பட்ட மாவட்டங்கள்தோறும் தொலைதூர கல்வி முறையை அமல்படுத்த வேண் டும்.

கண்டுகொள்ளாத தமிழக அரசு

இந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட்  கூட்டத்தில், உயர் கல்வி சம்பந்தமாக  பேசிய அரசாங்கம், உயர்கல்வி துறை யில் ‘அறிவுசார் நகர உருவாக்கம்’ என்ற திட்டம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த  பல்கலைக்கழகத்துடன் இணைந்து  புதிய நகர கிளைகள் உருவாக்கப்ப டும். இதன் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு  புதிய வழி பிறக்கும், என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.5200 கோடியுடன் கூடு தலாக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அறிவித்த அறிவிப்புக்கும், ஒதுக்கீடு செய்த நிதிக்கும் சிறிதளவும் சம்பந்தமில்லாத நிலைமை உள்ளது. 21  பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பல் கலைக்கழகங்களில், பலவற்றில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பணி யிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதி லாக பொறுப்பு அதிகாரிகளை நியமிக் கப்படுகின்றனர். இது பல்கலைக்கழகத் தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கின்றது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கி வருவது தமிழ்நாடு. தமிழக  அரசு அதை பாதுகாத்துக் கொள்ள உயர் கல்விக்கு உயிர்தரும் பல்கலைக் கழகங்களை முதலில் பாதுகாக்க  வேண்டும். பல்வேறு பல்கலைக் கழகங்கள் நிதி சுமையின் காரணமாக  பல்வேறு குளறுபடிகளை சந்தித்து வரு கிறது. பல்கலைக்கழக நிர்வாகமே இவ் வாறு குளறுபடிகளை சந்தித்தால்,  அங்கு பயிலும் மாணவர்கள் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகும். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு அரசும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க முன் முயற்சி எடுக்கவில்லை. வருகின்ற  காலத்திலாவது பல்கலைக்கழகங் களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் மாநில உரிமையையும் பாது காக்க வேண்டும்.

-தினேஷ்ராஜா,
கோவை மாவட்டப் பொருளாளர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.