தருமபுரி, பிப்.13- பென்னாகரம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்யும் காட்டுப்பன்றி களை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பகுதியா கும். மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகு திகளைக் கொண்டுள்ளதால் அவ்வப்போது யானை, காட்டுப்பன்றிகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வறட்சி நிலவும் போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமப் பகுதிக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந் நிலையில், பெரும்பாலை அருகே உள்ள அர காசனஅள்ளி பகுதியில் இரண்டு ஏக்கர் பரப் பளவில் பயிரிட்டுள்ள நிலக்கடலை பயி ரினை, பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 20க்கும் மேற்பட்ட காட் டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இத னால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள னர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முனியப்பன் கூறுகையில், கார்த்திகை மாத பட்டத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப் பில் சொட்டுநீர் பாசன முறையில் நிலக் கடலை பயிர் செய்யப்பட்டது. விவசாய நிலம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காவலுக்கு இருக்கிறோம். ஒலி எழுப்பான், வயல்வெளியைச் சுற்றி விலங்கு கள் நுழையாத வகையில் கம்பி வேலிகள் அமைத்து பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், இரவு நேரத்தில் பென்னா கரம் வனப்பகுதியிலிருந்து விளைநிலங்க ளுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த நிலக்கடலை பயிரினை முற்றிலுமாக சேதப் படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு சென்றனர். ஆனால், இதுவரையில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை. ஏற்கனவே, ராயக்கோட்டை பகுதி யில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்த நிலக்கடலையினை காட்டுப்பன்றிகள் சேதப் படுத்தியதால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும், பயிரிழப்புகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அறிக் கையினை மாவட்ட வன அலுவலகத்தில் அளித்த போதிலும் இதுவரையிலும் வனத் துறையினர் முறையான விசாரணை மேற் கொள்ளவில்லை, என்றார். எனவே, வனப்பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் நுழையாத வகையில் அகழிகள் அமைத்துத் தர வேண்டும். மேலும், பயிர் சேதத்திற்கு உட னடியாக உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.