districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் ஓட்டம்

நாமக்கல், ஜன.1- பள்ளிபாளையம் அருகே புத்தாண்டை முன்னிட்டு, சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள், போலீசா ரைக் கண்டதும் எதுவும் தெரியாததுபோல் அங்கிருந்து சென்ற சம்பவம் குறித்த காணொலி வைரலாகி வருகி றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்கில புத் தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் பொது மக்கள் கேக்குகளை வெட்டி, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டாடினர். இந்நிலையில், ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி புதனன்று நள்ளிரவு  ஒரு மணிக்கு வந்து கொண்டிருந்த சொகுசு மினி சுற்றுலா பேருந்தை, பள்ளிபாளையம் காவல் நிலையம் எதிரே வழிமறித்து இளைஞர்கள் சாலையில் உற்சாக நடனம் ஆடினர். இதன் காரணமாக பின் தொடர்ந்து வந்த வாக னங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து  தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப் போது போலீசாரைக் கண்டதும், பம்மி பதுங்கிய இளை ஞர்கள், எதுவும் தெரியாததுபோல நழுவி சென்றனர்.+

கலப்பட வெல்லம் தயாரிக்க முயற்சி: 3 டன் சர்க்கரை பறிமுதல்

சேலம், ஜன.1- சேலத்தில் வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய் வில், கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சர்க் கரை பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த ஆலைகளில் வெல்லம் தயா ரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வெல்லம் தயாரிக்க செயற்கை நிறமூட்டிகள், சர்க்கரை பயன்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு புகார் கள் வந்தன. இதையடுத்து தாரமங்க லம், ஓமலூர், காமலாபுரம், தீவட்டிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு அண்மையில் அதிரடி ஆய்வு  நடத்தியது. அதில் 7 ஆலைகளில் கலப்பட வெல்லம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 3 டன் சர்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 7 ஆலைகளுக்கும் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஆலை உரிமையாளர்களை எச்ச ரித்தனர். இதுகுறித்து உணவு பாது காப்பு அதிகாரிகள் கூறுகையில், வெல்ல ஆலைகளில் தயாராகும் வெல்லம் சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத் தில் 250 ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீத முள்ள ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடை பெற்று வருகிறது. கலப்பட வெல்லம் தயாரிப்பது சட்டபடி குற்றமாகும். விதிகளை மீறி கலப்பட வெல்லம் தயாரிக்க சர்க்கரை, ஹைட்ரோஸ், பிளீச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை பயன்ப டுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உண வுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

6 பேருக்கு டெங்கு

கோவை, ஜன.1- கோவையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற் போது டெங்கு காய்ச்சல் பாதித்த 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரண மாக தினமும் 50 முதல் 60  பேர் வரை புற நோயாளிக ளாக சிகிச்சை பெற்று செல் கிறார்கள் என்று மருத்துவர் கள் தெரிவித்தனர்.

நாளை மின்தடை

உடுமலை, ஜன.1- குரல்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று (நாளை) மின்விநியோகம் இருக்காது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகே உள்ள பாலப் பட்டி துணை மின்நிலை யத்தில் மின் பாதைகளில் வெள்ளியன்று (நாளை) பரா மரிப்புப் பணிகள் நடை பெற உள்ளது. இதனால் உடு மலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேருவீதி, நக ராட்சி அலுவலகம், பார்க்,  ரயில் நிலையம், போலீஸ்  குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.  புரம், பாலப்பம்பட்டி,  கண்ண மநாயக்கனூர், மைவாடி பிரிவு, குரல்குட்டை, மடத் தூர், மலையாண்டிபட்டி ணம், மருள்பட்டி, உரல் பட்டி, சாளரப்பட்டி மற்றும்  பாப்பான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று செயற் பொறியாளர் மூர்த்தி தெரி வித்துள்ளார்.

உருளை தடுப்பாண்கள் அமைக்கும் பணி தீவிரம்

உருளை தடுப்பாண்கள் அமைக்கும் பணி தீவிரம் நாமக்கல், ஜன.1- கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உரு ளைத் தடுப்பாண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றாக கொல்லிமலை உள்ளது. இம்மலையின் அழகை ரசிக்க விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிக ளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும்  நிலையில், காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து  மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 70 கொண்டை  ஊசி வளைவுகளில் விபத்தை தடுப்பதற்கான உருளைத் தடுப்பாண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற் காக தமிழக நெடுஞ்சாலைத்துறை ரூ.10 கோடி ஒதுக் கீடு செய்தது. இதனிடையே, கொண்டை ஊசி வளைவு  பகுதிகளில் எந்தெந்த இடங்களில் உருளைத் தடுப் பாண்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அள வீடு செய்தனர். முதற்கட்டமாக 30 இடங்களில் அவற்றை  அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அண்மை யில், 50, 64 ஆவது கொண்டை ஊசி வளைவுகளில்  உருளைத் தடுப்பாண்கள் பொருத்தப்பட்டு வெள் ளோட்டம் பார்க்கப்பட்டது. அங்கு வெற்றிக்கரமாக அமைந்திட, மீதமுள்ள இடங்களில் அவற்றைப் பொருத் துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது தருமபுரி, ஜன.1- தருமபுரியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் (40). இவருக்கு திரு மணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன்பின் ஓட்டுநர்  தொழில் மற்றும் விறகு உடைக்கும் கூலி வேலை  செய்து வந்தார். இந்நிலையில், தருமபுரி அருகே  ஒரு பகுதியைச் சேர்ந்த, சிறுமிகளின் பெற்றோர்  திங்களன்று அதியமான்கோட்டை காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதில், பெருமாள், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரி விக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் லதா, பெருமாளை கைது  செய்து விசாரித்து வருகிறார். மேலும், பெருமாள் மீது  கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் உள்ளதும் குறிப்பிடத்தக் கது. இந்நிலையில், பெருமாள் அவ்வப்போது மது  அருந்திவிட்டு தகராறு செய்வதால், பலர் அச்ச மடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ள னர். இதில், 3 சிறுமிகள் பாதிப்பு குறித்து புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க வர லாம் என்பதால், அதியமான்கோட்டை மற்றும் நல்லம் பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்,  சிறுமிகளின் பெற்றோரிடம் சைல்ட் ஹெல்ப் லைன்  மேற்பார்வையாளர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குண்டர் தடுப்பு சட்டம்: 2024 இல் அதிகரிப்பு

ஈரோடு, ஜன. 1- ஈரோட்டில், 2023 ஆம் ஆண்டை  காட்டிலும், 2024 ஆம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்து, சிறையில் அடைக் கப்பட்டோர் எண்ணிக்கை அதிக ரித்து உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட  காவல்துறையினர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, அதில், ஈரோடு மாவட்டத்தில், 2023 ஆம் ஆண்டு  33 கொலை வழக்குகள் பதிவாகியி ருந்த நிலையில், 2024 இல் 28  கொலை வழக்குகள் பதிவாகியுள் ளது. இதில் 7 வழக்குகள் குடும்பத் திற்குள் நடைபெற்ற சண்டையின் காரணமாக நடைபெற்ற கொலை  வழக்குகளாகும். பதிவான அனைத்து கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு 49 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 378 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டும், அதில் 517 குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து 102 வாகனங்கள் மற்றும் 844  சவரன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 98 லட்சத்து 73 ஆயி ரத்து 890 மதிப்புள்ள 80 விழுக் காடு களவு சொத்துகள் மீட்கப்பட்டு  உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 2024 ஆம் ஆண்டில் 78 கொடுங் குற்ற வழக்குகளில் 77 கொடுங் குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப் பட்டன. அதில், 158 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களி டமிருந்து 7 வாகனங்கள் மற்றும் 621  சவரன் நகைகள் உட்பட ரூ.1 கோடியே 87 லட்சத்து 68 ஆயிரத்து  200 மதிப்புள்ள 93 விழுக்காடு களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், 408 சாதாரண குற்ற வழக்கு களில் 329 குற்ற வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில், 95  வாகனங்கள் மற்றும் 223 சவரன்  நகைகள் உட்பட ரூ.1 கோடியே 11  லட்சத்து 5 ஆயிரத்து 690 மதிப்புள்ள 64 விழுக்காடு சொத்துக்கள் மீட் கப்பட்டு உரியவர்களிடம் ஒப் படைக்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைக ளில் ஈடுபட்ட 51 ஆயிரத்து 179 நபர் கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கை யின் மூலம் கடந்த 2023 ஆம்  ஆண்டை காட்டிலும் 2024 ஆம்  ஆண்டு அதிகப்படியான வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மதுபானங்கள் மற்றும் வெளி மாநில மதுபானங்களை கள்ள சந்தையில் பதுக்கியும் மற்றும்  கள்ளச்சாராயம் விற்பனை செய்த வர்கள் மீது 3 ஆயிரத்து 162 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது. அதில் 3  ஆயிரத்து 295 நபர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து மது பாட்டில்களை உரிய முறையில் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 219 அனாமதேய இரு சக்கர வாகனங்கள் ரூ.5 லட்சத்து 26  ஆயிரத்து 398க்கு ஏலம் விடப்பட் டது. 31 மணல் திருட்டு வழக்குக ளில் 40 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டு 31 நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 147  சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 761 நபர்கள் கைது செய்யப்பட் டது.  பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்களை தடுக் கும் பொருட்டு, மாவட்டம் முழுவ தும் காவல் உதவி செயலி மூலம்  12 ஆயிரத்து 910 பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள் ளது. இதன் மூலம் 36 குழந்தை  திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது. 270 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலுக்கு உட் படுத்தப்பட்டுள்ளனர். அதில் 15 வழக்குகளின் குற்றவாளிகள் குண் டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு காவ லுக்கு அனுப்பப்பட்டனர். 4 வழக்கு களில் உள்ள 3 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை யும் 5000 ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 33 நபர்கள்  மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். 2024 இல்  55 நபர்கள் மீது குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். 429 சரித்திர பதிவேடு குற்ற வாளிகள் மீது சிறப்பு பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந் தப்பட்ட கோட்டாச்சியர் மூலம் நன் னடத்தைக்கான பிணைபத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும், புதி தாக 41 குற்றவாளிகளை கண் காணிக்கும் பொருட்டு சரித்திர பதி வேடு தொடங்கப்பட்டு கண்காணிப் பட்டு வருகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, ஜன.1- நல்லம்பள்ளி அருகே விவசா யத்தையும், நீராதாரத்தையும் பாதிக் கும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம்  அமைப்பதை கைவிட வேண்டும்,  என விவசாயிகள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், எர்ரபையனஹள்ளி ஊராட் சிக்குட்பட்ட பாலிக்காடு பகுதியில், அர சுக்கு சொந்தமான 42 ஏக்கர் பரப்பில்,  ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2021  ஆம் ஆண்டு, பலன் தரும் மரக்கன்று நடும் திட்டத்தை, அப்போதைய தரும புரி ஆட்சியர் திவ்யதர்ஷிணி தொடங்கி  வைத்தார். இதில், மா, பாலா, நாவல்,  கொய்யா, எலுமிச்சை, சப்போட்ட, புளி யமரம், தென்னை உட்பட, 25 வகையான  பலன் தரும் 12 ஆயிரம் மரக்கன்றுகள்  நடவு செய்யப்பட்டன. அவற்றிற்கான நீர் ஆதாரமாக 2 தடுப்பணை, ஒரு  கிணறு மற்றும் தொட்டிகள் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையின் திட்டங் கள் மூலம் செயல்படுத்தபட்டன. மேலும், அப்பகுதியை சுற்றுலாத் தல மாக அறிவிக்க வேண்டுமென, 2022  ஆம் ஆண்டில் நடந்த கிராம சபை  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. இந்நிலையில், எர்ரபையனஹள்ளி பழத்தோட்டத்தில் ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சித்துறையின் தூய்மை பாரத இயக்கம் சார்பில், மலக்கசடு சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு கடந்த டிச.17 அன்று  சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ரூ.1.80  கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள் ளது. விரைவில் அப்பகுதியில் மலக்க சடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படவுள்ளது. இங்கு அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள நீரோடைகள் வழியாக, அருகி லுள்ள நாகாவதி அணை மற்றும் நாகா வதி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு  செல்லும். இதனால் நாகாவதி அணை  மற்றும் அதனை நம்பியுள்ள பாசன  நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படும். எனவே, விவசாயத்தையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் பால் படுத்தும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலை யம் அமைப்பதை கைவிட வேண்டும், என அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.