ஆசிய கூடைப்பந்து போட்டி மாணவனுக்கு வரவேற்பு
கோவை, செப்.3- இந்திய கூடைப்பந்து அணியின் 16 வயதுக்கு உட் பட்டோருக்கான அணியில் இடம் பெற்று, தகுதி சுற்றில் ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன் ஷிப்பிற்கான தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டி கள் கடந்த ஆக.28 ஆம் தேதியன்று ஸ்ரீலங்காவில் நடை பெற்றது. இதில் ஸ்ரீலங்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய அணியில் கோவையை சேர்ந்த ஆதவன் என்ற பள்ளி மாணவன் இடம் பிடித்து விளையாடினார். கோவை யிலிருந்து 16 வயதுக்குட்பட்ட இந்திய கூடைப்பந்து அணியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற மாண வன் ஆதவனிற்கு, அவர் பயின்று வரும் சுகுணா பிப் பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது. சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவர் சுகுணா, ஆதவனின் பெற்றோர் குமரேசன், ஜெய மணி, சுகுணா பிப் பள்ளியின் சீனியர் முதல்வர் மார்ட்டின், முதல்வர் பூவணன், அகாடமிக் ஒருங்கிணைப்பாளர் ஷோபா, உடற்கல்வி இயக்குநர் ஆல்வின் பிரான்சிஸ் உட்பட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை சார்பில் தற்காப்பு பயிற்சி
கோவை, செப்.3- கோவை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாண வர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் ஞாயிறன்று துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல்துறையினர் மாநகர பகுதி களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளனர். இத்திட்டம் தனி யார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப் படுகிறது. கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த தற்காப்பு பயிற்சிகள் மாநகர காவல் ஆணை யாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில் தற்காப்பு பயிற்சி கள் வழங்கப்படுகின்றன. இதில் கோவை மாநகர் பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
அவிநாசி, செப்.3- சென்னையைச் சேர்ந்த தசி (எ) சிவக் குமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாக ராஜ் ஆகிய 4 பேர், கேரளாவில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டி ருந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, பழங்கரை அருகே வந்த போது முன் பக்க டயர் வெடித்ததில், நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், திரைப்படம் மற்றும் சின்னத் திரைகளுக்கு இசையமைப்பாளராக பணி யாற்றி வரும் தசி (எ) சிவக்குமார் (49), ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் சென்னை யைச் சேர்ந்த தமிழ் அடியான் (50) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல் கள் உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுடன் சாலை மறியல்
நாமக்கல், செப்.3- நாமக்கல் அருகே சாலை செப்பனிட கோரி கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொன்னேரி கைக்காட்டில் இருந்து கோம் பைக்கு செல்லும் சாலை பகுதியில், ஏராள மான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொன்னேரி கைக்காட்டில் இருந்து கோம் பைக்கு செல்லும் சாலை குண்டும், குழியு மாக உள்ளது. இதனால், மழைக்காலங் களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி யளிக்கிறது. இதன் காரணமாக, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்க விழா நடைபெற்றது. ஆனால், பணிகள் ஏதும் நடை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலை யில், மண் சாலைக்கு பதில், புதிய தார்ச் சாலை அமைத்து தரவேண்டும் என வலி யுறுத்தி பொன்னேரியில் இருந்து கைகாட்டி செல்லும் சாலையில் பொதுமக்கள், கால் நடைகளுடன் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் வட்டாட்சியர் சீனிவாசன், காவல் கண் காணிப்பாளர் தன்ராஜ் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைந்து புதிய தார்ச்சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்ததால் போராட்டம் விளக்கிக் கொள் ளப்பட்டது. இந்த மறியல் போராட்டதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சிப்காட்டில் மாசு குறித்த ஆய்வு நீட்டிப்பு
ஈரோடு, செப்.3- பெருந்துறை சிப்காட் வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பாலத்தொழுவு குளம் மாசடைவது தொடர்பான அதிகாரிகள் குழுக்களின் ஆய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை மற் றும் ஈங்கூர் கிராமங்களில் சுமார் 2709 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. இங்கு 157 தொழிற்சாலை கள் இயங்கி வருகின்றன. சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பாலத்தொழுவு குளம் மாசடைவ தாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பெருந் துறை சிப்காட்டில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை களையும் திடீர் ஆய்வு செய்ய தலா மூன்று அதிகாரிகளை கொண்ட மூன்று சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டது. இக் குழுக்கள் கடந்த ஆக.30 ஆம் தேதி முதல் செப்.1 ஆம் தேதி வரை மூன்று தினங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை யினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து குழுக்களின் ஆய்வினை மேலும் மூன்று தினங்களுக்கு (செப்.4, 5 & 7) நீட்டிக்க உத்தர விடப்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழுதடைந்த மின் சாதனங்களுடன் தர்ணா
சேலம், செப்.3- அயோத்தியாப்பட்டணம் மின்வாரிய அலுவலகம் முன்பு, பழுதடைந்த மின் சாதனங்களுடன் பொதுமக்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனி பகுதி யில் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் தொலைக்காட்சி, மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்தன. இதுகுறித்து அப்பகுதி மக் கள் மின்வாரியத்தில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே சனி யன்று அயோத்தியாப்பட்டணம் மின்வாரிய அலுவலகத் திற்கு வந்த தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், அடிக்கடி சீரற்ற மின்விநியோகம் வழங்குவதாக குற்றஞ் சாட்டி, பழுதடைந்த மின்சாதன பொருட்களுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலத்தில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம்
சேலம், செப்.3- அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில், ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்காக எப்போதும் பரபரப்பாக இருக்கும் அஸ்தம்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆடல், பாடல் மற்றும் தமிழர்களின் பாரம் பரிய கலைகள், குழந்தைகளின் நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில், மாநகர காவல் துணை ஆனையர் சந்திரமெளலி கலந்துகொண்டு, மாணவர் கள் போதைபழக்ககத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அதனை கைவிட்டு நல்ல வழியில் வர வேண்டும், என வேண்டு கோள் விடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு திரைப்பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது. திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அனைத்ததால், எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மழைக்கு இருவர் பலி
ஈரோடு, செப்.2- ஈரோடு அருகே மழை யால் வீட்டின் மேற்கூரை இடிந்து இருவர் உயிரிழந் தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில், கனமழையால் பெரிய அக்ரஹாரம் பகுதி யில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்த சாரம்மா (34), அவரது மகன் முகமது அக்தர் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந் தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.