districts

img

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு

கோவை, அக்.14-  டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த வரவேற்புக்குழு நிர்வாகிகளுக்கு நன்றி அறி விப்பு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் 5 ஆவது  மாநில மாநாடு கோவை  ஹர்சா மஹாலில் அக்டோ பர் 2,3 தேதிகளில் நடைபெற்றது. காவல் துறையினர் இறுதி கட்டத்தில் பல்வேறு இடை யூறு அளித்தபோதும், இதனையும் மீறி பொது மாநாடு மற்றும் பிரநிதிகள் மாநாடு  வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் மாநாட்டு வரவேற்புக்குழுவினர் பெரும் பங்காற்றி னர். இதனையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு நிறைவு கூட்டமும், மாநாட்டின் வெற் றிக்காக உழைத்தவர்களுக்கு பாராட்டி, கௌரவித்து நன்றி தெரிவிக்கும் விழா வியா ழனன்று கணபதி இன்ஜினியரிங் சங்க அலுவ லக கூட்டரங்கில் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவரும், வர வேற்புக்குழு தலைவருமான எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.  இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் பங்கேற்று வரவேற்புக் குழுவினரை பாராட்டி கௌரவித்தார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளார் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, சிஐடியு டாஸ்மாக்  ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலா ளர் ஜான்அந்தோணிராஜ், பொருளாளர் ராம கிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். முன்னதாக சங்கத்தின் பொதுச்செய லாளர் திருச்செல்வன் பேசுகையில், கோவை மண்ணில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி யுள்ளோம். இதேபோன்று மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை வென்றெடுத் திட களம் காண்போம், என்றார்.