districts

விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியை ஜூன் மாதத்தில் தொடங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

ஈரோடு, மே 23- தமிழ்நாடு அரசின் விலை யில்லா வேட்டி, சேலை உற் பத்தியை ஜுன் மாதத்தில் தொடங்க  ஆணையிடுமாறு விசைத்தறி யாளர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில் உள்ளது. விசைத்தறி தொழிலில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதனை  சார்ந்து நேரடியாகவும், மறைமுக மாகவும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட  குடும்பங்கள் வாழ்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி  தொழில் மிகவும் மோசமடைந்து,  குறிப்பாக நூல் விலை ஏற்றம்,  இறக்கம் காரணமாக விசைத்தறி கள் விற்பனைக்கு மற்றும் உடைக் கப்பட்டு இரும்பு வியாபாரத் திற்கும் சென்று கொண்டிருந்தது. நூல் விலை கட்டுப்பாடு தொடர் பாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசின் வலியுறுத்தல் விளைவாக தற்போது நூல் விலை நிலையாக உள்ளது. அதேபோல்  செஸ் வரி விலக்கு  மூலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் பெரும் பயன் பெற்று  வந்தனர். இலவச மின்சாரம் 750 இ லிருந்து 1000 யூனிட் ஆக உயர்த் தப்பட்டது. செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கடந்த மார்ச் மாதம் பாதியாக குறைத்தது. அத்துடன் தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி, பள்ளி சீருடை  உற்பத்தி மூலம் விசைத்தறி யாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது. இதன் மூலம் 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களால் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளில் உற் பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வேட்டி, சேலை  வடிவத்தில் சில மாறுதல் செய்த காரணத்தால் சற்று தாமதமாக உற் பத்தி தொடங்கியது. அதன்பின் பள்ளிச் சீருடை உற்பத்தி தொடங் கியது.

இந்த வருடம் விசைத்தறி யில் உற்பத்தி செய்ய கேஸ்மட்  ரகம் மட்டும் 59 லட்சத்து 63ஆயிரத்து  77 மீட்டர்  வந்துள்ளது. இதனை விசைத்தறியாளர்கள் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விடு வார்கள். ஜூன் மாதத்தில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு வேலை  வாய்ப்பு பாதிக்கப்படும். ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்து தரும் வகையில்  விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியை தொடங்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் உற்பத்தி தொடக்கம் தொடர்பாக அரசாணை வெளியிட  வேண்டும். அதன் பின் உற்பத்தி தொடர்பான நூல் டெண்டர், சைசிங்  டெண்டர் போன்றவற்றை நிறைவு செய்ய வேண்டும். ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 225 விசைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம்  விசைத்தறியாளர்களுக்கு உற் பத்தி ஆணை வழங்கப்பட வேண்டும். போர்க்கால அடிப்படை யில் உற்பத்தியை தொடங்க தமிழ் நாடு முதல்வர் ஆணை பிறப்பித்து விசைத்தறியாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத் தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டிஎஸ்ஏ.சுப்ர மணியன் முதல்வருக்கு அனுப்பிய  மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.