districts

img

வரும் தேர்தலில் இந்திய கூட்டணியை வலுப்படுத்துவோம்

கோபி, மார்ச் 3- இந்தியாவையும், இந்திய அரசியல மைப்பையும் பாதுகாக்க நாடாளுமன் றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரலாக, வரு கிற தேர்தலில் இந்திய கூட்டணியை வலுப்படுத்துவோம் என நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா பேசி னார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் திமுக சார்பில் எல்லா ருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், முதல்வரின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை  பொதுசெயலாளரும்,  நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினருமான ஆ.இராசா கலந்து கொண்டார். இதன்பின் பேசிய அவர், இறந்த பிணத்திற்கு மருந்து மாத்திரை வழங்கி  காப்பீடு வழங்கியதில் ஊழல், ஏழு லட் சம் கோடி ஊழல், அதானி மீது புகார்  பதிவு, பில்கிஸ் பானு கொலை வழக்கு  என அனைத்திற்கும் பதில் அளிக்காத மோடி அரசு, ஒரே பதிலாக ஜெய்ஸ்ரீ ராம் என கூவி வருகிறது. இந்த சூழலில், இந்தியாவையும், இந்திய அரசியல மைப்பையும் பாதுகாக்க நாடாளுமன் றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரலாக, வரு கிற தேர்தலில் இந்திய கூட்டணியை வலுப்படுத்துவோம் என்றார்.  பெரியார், அண்ணா, கலைஞர்  இவர்கள் எல்லாம் எதிர் கொள்ளாத  சவால்களை தமிழக முதல்வர் எதிர்  கொண்டு வருகிறார். விஸ்கர்மா திட் டத்தை திமுக அரசு அன்றே குலக்கல்வி என்று எதிர்த்தது. குலக்கல்வி திட்டம் இருந்திருந்தால் நான் இங்கு வந்து  பேசியிருக்க முடியாது, நாடாளு மன்ற உறுப்பினராக இருக்க முடியாது.  குலக்கல்வித் திட்டம் என்பது, பிற்படுத் ்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை  மக்களின் உயர்கல்வி உரிமையை பறிப் பதாகும் என்றார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.