கோவை, மே 3– உரிமைக்கான போராட்டத்தில் உயிர் நீத்து போராடிப்பெற்ற உரி மைகளை ஒருபோதும் இழக்க மாட்டோம்; ஒன்றுபட்டு போரிட்டு பாதுகாப்போம் என மே தினத்தில் நடைபெற்ற பேரணியில் தொழிலா ளர்கள் முழக்கங்களை எழுப்பி னர். கோவை மாவட்டத்தில் சிஐடியு மற்றும் சிபிஎம் இயக்கங்களின் சார்பில் மே தின விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளின் சார்பிலும், சிஐடியு மற்றும் இணைக் கப்பட்ட சிஐடியு சங்கங்களின் சார் பில் மே தினம், செங்கொடியேற்றி எழுச்சி முழக்கத்தோடு கொண்டாடப் பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர். இதன் முத்தாய்ப்பாக சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங் கள் பங்கேற்ற மாபெரும் மே தின பேரணி நடைபெற்றது. கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே துவங்கிய பேரணி காந்திபுரம் 2 ஆவது வீதி வழியாக சிவானந்தா காலனியில் உள்ள ஆறுமுக்கு பகுதியில் நிறை வடைந்தது.
இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். ஏஐடி யுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் தங்கவேல் வரவேற்புரையாற்றி னார். இதில் ஏஐடியுசி மாநிலச் செய லாளர் எம்.ஆறுமுகம், சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங் காரவேலு, மாவட்ட தலைவர் சி.பத் மநாபன், ஏஐடியுசி கே.எம்.செல்வ ராஜ் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவைப்பகுதி செய லாளர் கே.துளசிதரன், வங்கி ஊழி யர் சங்கத்தின் ஏ.சையது இப்ரா ஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக சிஐடியு, ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்று உரிமை முழக் கத்தை எழுப்பினர். இதேபோன்று சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மே தின பேரணி, பொதுக்கூட்டங் கள் நடைபெற்றது. இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.சரவணன் தலைமையில், பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பிலிருந்து துவங்கிய மே தின பேரணியானது காந்திசிலை வழியாக திருவள்ளு வர் திடலை வந்தடைந்தது. இதை யடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு ஏஐடியுசி பொள்ளாச்சி வட் டார செயலாளர் கே.தங்கவேலு தலைமை வகித்தார். இதில், பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க தாலுகா செயலாளர் ஆர்.பிரபாகரன், சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி, அமைப்புசாரா தொழிலாளர் கள் சங்க மாவட்ட செயலாளர் கே. வெங்கடாசலம், போக்குவரத்து ஊழியர் சங்க கோவை மண்டல தலைவர் எம்.பரமசிவம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே.மகாலிங் கம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நிறைவாக, தமிழ்நாடு விவசாயி கள் சங்க தாலுகா பொறுப்பாளர் ஸ்டாலின் பழனிச்சாமி நன்றி கூறி னார்.
சேலம்
சேலம் வடக்கு மாநகரில் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழா வில் பொதுமக்களுக்கு நீர், மோர், இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மாநகரக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.