தருமபுரி, மார்ச் 31- தீர்த்தமலை வனப்பகுதியில், விலங்குகளின் தாகம் தீர்க் கும் வகையில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை வனச்ச ரக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி வனப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட் டுள்ள பழைய தண்ணீர் தொட்டிகளில் சுத்தப்படுத்தப்பட் டுள்ளது. மேலும், புதியதாக தண்ணீர் தொட்டிகள் அமைக் கப்பட்டு, வாடகை வாகனங்களை பயன்படுத்தி அந்த தொட்டி களில் தண்ணீர் நிரப்பட்டு வருகிறது. ஆறுகளில் பள்ளங்கள் தோண்டியும், தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.